எல்லாம் செல்லுங்கள், உங்களால் ஆகும் என்றால் அயோத்தியை நெருங்கி; காமின் அது இன்று கனல் கரி ஆக வேம் - காவல் செய்யுங்கள்; அந்த அயோத்தி நகரம் இன்று நெருப்பில் கரியாக வேகப் போகின்றது; அது செய்து இனி மீள்குவென் என்றான் - அந்தச் செயலைச் செய்துவிட்டு இப்போதே மீள்வேன் என்று கூறினான். |
(37) |
8877. | ‘தம்பியர்தம்மொடு தாயரும் ஆயோர், உம்பர் விலக்கிடினும், இனி உய்யார்; வெம்பு கடுங் கனல் வீசிடும் என் கை அம்புகளோடும் அவிந்தனர் அம்மா! |
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர் - (இராமனுக்கு) தம்பியரும், தாயரும் ஆகிய அனைவரும்; உம்பர் விலக்கிடினும் இனி உய்யார் - இனித்தேவர்களே வந்து தடுத்தாலும் பிழைக்கமாட்டார்கள்; வெம்பு கடுங்கனல் வீசிடும் என்கை - வெம்புகின்ற கடுமையான கனலை வீசுகின்ற எனது கையிலுள்ள; அம்புகளோடும் அவிந்தனர் - கணைகளால் இறந்தவரே ஆவார். |
அம்மா - வியப்பிடைச் சொல். |
(38) |
8878. | ‘இப்பொழுதே கடிது ஏகுவென், யான்; இப் புட்பக மானம்அதில் புக நின்றேன்; தப்புவரே அவர், சங்கை இலா என் வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால்? |
யான்இப்புட்பக மானம் அதில் புக நின்றேன் - நான் இந்தப் புட்பக விமானத்தில் புக நின்றவனாய்; இப்பொழுதே கடிதேகுவன் - இப்பொழுதே அயோத்திக்கு விரைந்து செல்வேன்; சங்கை இலா என் வெப்பு உறு வாளிகள்- கணக்கற்ற எனது வெப்பம் மிக்கக் கணைகள்; ஓடி விரைந்தால் தப்புவரே அவர்? - ஓடி விரைந்து சென்று தாக்குமேயானால் அவர்கள் தப்பி விடுவார்களா? (தப்பார்). |
(39) |
மாயாசீதையை வெட்டி, இந்திரசித்தன் படையுடன் வடக்கு நோக்கி எழுதல் |
8879. | ‘ஆளுடையாய்! அருளாய், அருளாய்!’ என்று ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான், |