பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 737

வாளின் எறிந்தனன்; மா கடல் போலும
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான்.
 

ஆளுடையாய்  அருளாய் அருளாய்! என்று - ‘என்னை ஆளாக
உடைய அரசே! அருள்வாயாக, அருள்வாயாக என்று; ஏழை வழங்குறு
சொல்லின்   இரங்கான்
 -  (மாய்)  சீதை  சொல்கின்ற  சொல்லுக்கு
இரங்காதவனாய்;  வாளின்  எறிந்தனன்  - அவளை வாளால் வெட்டி
வீழ்த்தினான்;   மாகடல்   போலும்   நீள்  உறு  சேனையினோடு
நிமிர்ந்தான்
 -  (பிறகு)  கடல்  போலும்  முழக்கத்தையுடைய பெரிய
சேனையோடு புட்பக விமானத்தில் உயர்ந்து பறந்தான்.
 

                                                 (40)
 

8880.

தென் திசைநின்று வடாது திசைக்கண்
பொன் திகழ் புட்பகம்மேல்கொடு போனான்;
ஒன்றும் உணர்ந்திலன், மாருதி, உக்கான்,
வென்றி நெடுங் கிரி போல விழுந்தான்.
 

தென்திசை நின்று வடாது  திசைக்கண் -  தென்திசையிலிருந்து
வடதிசையினிடத்தை (நோக்கி);  பொன்திகழ் புட்பகம்  மேல் கொடு
போனான்
- பொன்னொளி  வீசும் புட்பக  விமானத்தின் மேல் இந்திர
சித்துபோனான்;  மாருதி  ஒன்றும்   உண்ர்ந்திலன்   உக்கான்  -
அது கண்டு  அனுமன்  ஒன்றும்   உணராதவனாய்     உயிர்ப்பிழந்து;
வென்றி  நெடுங்கிரி  போல விழுந்தான் - (பெருமையால்   ஏனைய
மலைகளைப் புறங்கண்டு) வெற்றி  கொண்ட  நெடிய  மலை  வீழ்ந்தது
போல வீ்ழ்ந்தான்.
 

                                                 (41)
 

                               இந்திரசித்தன் நிகும்பலை புகுதல்
 

8881.

போய், அவன் மாறி நிகும்பலை புக்கான்;
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்;
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்;
ஏயன பன்னினன், இன்னன சொன்னான்;
 

போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் - அயோத்தி நோக்கிப்
போவதாகக்   காட்டிய   இந்திரசித்து  அத்திசை   மாறி   நிகும்பலை
என்னும்   கோயிலுள்  புகுந்தான்;   தூயவன்   நெஞ்சு   துயர்ந்து
சுருண்டான்
- வஞ்சனையை உணரவியலாத