பக்கம் எண் :

738யுத்த காண்டம் 

தூயவனாகிய அனுமன் மனம் வருந்திச் சுருண்டு விழுந்தான்;  நெஞ்சம்
ஓய்வொடு   ஒடுங்க  உலர்ந்தான்
-  (அங்ஙனம்  வீழ்ந்தவனுடைய)
நெஞ்சம்     ஓய்தலோடு    தளர்ச்சியடைய      உடலும்   உலர்ந்து
காய்பவனானான்;  ஏயன   பன்னினன்   இன்னை  சொன்னான் -
(மேலும்)   தன்   மனத்தில் தோன்றியதைச்    சொல்லத்   தொடங்கி
இத்தகைய   சொற்களைச்  சொல்லலானான்.
 

                                                 (42)
 

                                           அனுமன் அரற்றல்
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

8882.

‘அன்னமே!’  என்னும்;  ‘பெண்ணின்  அருங் குலக்
                                 கலமே!’ என்னும்;
‘என் அமே!’  என்னும்;   ‘தெய்வம்   இல்லையோ,
                                 யாதும்?’ என்னும்;
‘சின்னமே  செய்யக்  கண்டும்,    தீவினை நெஞ்சம்
                                           ஆவி
பின்னமே   ஆயதுஇல்லை’  என்னும்- பேர் ஆற்றல்
                                      பேர்ந்தான்.
 

பேர் ஆற்றல் பேர்ந்தான் அன்னமே!  என்னும் - தனது பெரிய
வலிமை   குறையப்   பெற்றவனாகிய  அனுமன்   (சீதையை  நோக்கி)
‘அன்னமே’  என்பான்;  பெண்ணின்  அருங்குலக் கலமே! என்னும்
-‘பெண்களின் அரிய குலத்திற்கே அணிகலன்  போன்றவளே!’ என்பான்;
என் அமே!  என்னும்  தெய்வம் இல்லையோ  யாதும்? என்னும் -
‘என்  அம்மையே’   என்பான்;   இத்தீமையைத்  தடுக்கத்   தெய்வம்
எதுவும்  இல்லையோ?   என்பான்; சின்னமே  செய்யக்  கண்டும் -
(உன்னை வாளினால்)   சின்ன   பின்னமாக்கக்   கண்டும்;  ‘தீவினை
நெஞ்சம்ஆவி   பின்னமே   ஆயது    இல்லை’   என்னும்
  -
தீவினையுடைய  எனது    நெஞ்சமும்  உயிரும்  பிளந்தொழியவில்லை
என்பான்.
 

                                                 (43)
 

8883.

எழுந்து, அவன்மேலே பாய எண்ணும்; பேர் இடரில்
                                         தள்ளி
விழுந்து, வெய்து உயிர்த்து, விம்மி, வீங்கும்; போய்
                               மெலியும்; வெந்தீக்