பக்கம் எண் :

74யுத்த காண்டம் 

பொலங்கழலோய்    -  பொன்னால்  செய்யப்பட்ட  வீரக்  கழல்
அணிந்தவனே;  முரண்  மூவாயிர  கோடியரோடு  - வலிமை உள்ள
முவாயிரங்கோடி காலாட்படை; கா ஆர் கரி - காத்தலைப் பொருந்திய
யானைப்படை;  தேர்  - தேர்ப்படை; பரி - குதிரைப் படை; காவலின்
போவாய்  இது  போது
- (ஆகியவை) காவல் செய்யப் (போர்க்களம்)
போவாய் இப்போது; என்று ஏவாதன யாவையும் ஏவினனால் - என்று
கூறி    (இதுவரை)    போருக்கு   அனுப்பாத   பெரும்   படையை
(அதிகாயனுடன் செல்க என) ஏவினான்.

முரண்     - வலிமை, கா - காத்தல்,  ஆர் -  பொருந்திய,  பரி -
குதிரை,  பொலங்கழல் - மூன்றாம் வேற்றுமை உருபும்  பயனும்  உடன்
தொக்க தொகை, கா - முதனிலைத் தொழிற் பெயர்.

                                                   (15)

7742.கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,- உன்
செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.

உம்பர்க்கும் வெலற்கு  அரியார்  உரவோர்  -  தேவர்களாலும்
வெல்லுவதற்கு  முடியாத   அருமையானவராகிய  பெருவலி  படைத்த;
கும்பக்   கொடியோனும்   -   கும்பன்   என்ற   பெயர்  படைத்த
கொடியவனும்;   நிகும்பனும்   -   நிகும்பன்   என்பவனும்;  வேறு
அம்பொன்   கழல்  வீரன்  அகம்பனும்
 -  (இவர்களில்  இருந்து)
வேறுபட்ட   அழகிய  பொன்னால்  ஆகிய   கழலணிந்த   வீரனாகிய
அகம்பனும்; உன் செம்பொன் பொலி தேர் அயல்  செல்குவரால் -
உன்னுடைய   சிவந்த  பொன்  போல்  அழகு   பொலிகிற  தேருக்கு
அருகில் (பாதுகாப்பவர்) ஆகச் செல்வார்கள்.

கும்பன்,  நிகும்பன்  இருவரும்  கும்பகருணனின் மகக்ள். அகம்பன்
- இவன் சுமாலி என்ற அரக்கனுடைய மகன்.

                                                   (16)

7743.‘ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன்
போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண்
தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்!

வெந்திறலோய் - கொடிய வலிமை படைத்தவனே!  போர்  ஏறிட
ஏறுவ
- போர்க்களத்தில் மேன்மேற் செல்வன; சிவற்கு உளது