அந்தோ - இரக்கக் குறிப்பு, அம்மா - உரையசை; வியப்பிடைச் சொல் எனினுமாம். நிகழாதது நிகழ்ந்ததால் வியப்பாயிற்று. இனி வரும் பாடல்களிலும் ‘அம்மா’வுக்கு இங்ஙனமே உரைக்க. | (45) | 8885. | ‘பெருஞ் சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணின்கொல்ல, இருஞ் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று இயற்றல்ஆற்றேன்; இருஞ் சிறை அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவி பட்ட அருஞ் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும், அம்மா! | பெருஞ்சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் -பெரியகாவலாகிய கற்பினை உடையசீதையை, பெண்ணினை; கண்ணின் கொல்ல - என்கண்முன்னால் கொல்லவும்; இருஞ்சிறகு அற்ற புள்போல்- பெரிய சிறகுகளை இழந்த பறவைபோல;யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் - யாதொன்றும் செய்ய இயலாதவனாய் இருந்து; இருஞ்சிறை அழுந்துகின்றேன் - பெரிய துன்பச்சிறையில் அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவிபட்ட - எம்பெருமானாகிய இராமன் மனைவியை அவள் அகப்பட்டிருந்த; அருஞ்சிறை மீட்டவண்ணம் அழிகிது பெரிதும், அம்மா - பொறுத்தற்கரிய சிறையிலிருந்து மீட்ட வண்ணம் அம்மா மிகவும் அழகிது! | (46) | 8886. | ‘பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை, பேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை, சீதையை, திருவை, தீண்டிச் சிறை வைத்த தீயோன் சேயே காதவும், கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா! | தெய்வப் பத்தினி தவத்துளாளை - தெய்வக் கற்புடையவளாய்த் தவத்திலிருப்பவளை; பேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை - பேதமைக் குணமுடையவளை, நல்ல குலத்திற் பிறந்த குற்றமற்றவளை; பெண்ணை, சீதையை திருவைத் தீண்டி -பெண் தன்மை நிரம்பியவளை, சீதையை, திருமகள் அமிச |
|
|
|