மானவளைக் கவர்ந்து சென்று; சிறை வைத்த பாதக அரக்கன் தீயோன் சேயே - சிறையில் வைத்த பாதக அரக்கனாகிய தீய இராவணன் மகனே; காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா - கொல்லவும் பார்த்து நின்ற என் செயலே கருணையுடையது! | (47) | 8887, | ‘கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகி, சொல்விக்க வந்து போனேன், ஆய இத் துயர் செய்தாரை வெல்விக்க வந்து, நின்னை மீட்பிக்க அன்று; வெய்தின் கொல்விக்க வந்தேன் உன்னை; கொடும் பழி கூட்டிக் கொண்டேன்.* | கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்தி - கல்வி அறிவிற்கும் எட்டாது உயர்ந்த பெரும்புகழினை உடைய காகுத்தன் தூதன் ஆகி - இராமபிரானுக்குத் தூதுவனாகி; சொல்விக்க வந்து போனேன் - அப்பெருமான் சொல்லியனுப்பியவற்றை (உன்னை உய்விக்கும் சொற்களை) தெரிவிக்க முன் வந்து போனேன்; ஆய இத்துயர் செய்தாரை வெல்விக்க வந்து - (ஆனால் இப்போதோ) கூட்டமாக இந்தத் துயர் செய்த அரக்கர்களை வெல்விக்கவந்தேன்; உன்னை மீட்பிக்க அன்று - உன்னை மீட்பிக்க அன்று; வெய்தின் உன்னைக் கொல்விக்க வந்தேன் - கொடுமையாக உன்னைக் கொல்லுமாறு செய்யவே வந்தேன் என்று; கொடும்பழி கூட்டிக் கொண்டேன் - ஒரு கொடும் பழியை நான் தேடிக்கொண்டேன். | (48) | 8888. | ‘வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான் என்ன, செஞ் சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற, “அம் சொலாள் இருந்தாள்; கண்டேன்” என்ற யான், “அரக்கன் கொல்லத் துஞ்சினாள்” என்றும் சொல்லத் தோன்றினேன்; தோற்றம் ஈதால்! |
|
|
|