பக்கம் எண் :

742யுத்த காண்டம் 

வஞ்சியை    எங்கும்  காணாது -  வஞ்சிக்  கொடி    போன்ற
சீதையை எங்கும் காணாமல்;  உயிரினை  மறந்தான் என்ன -   தன்
உயிரையே   மறந்தவன்  போல; தேடித்திரிகின்றான்    செஞ்சிலை
உரவோன் உள்ளம் தேற
-  தேடித்திரிகின்றவனாகிய   செம்மையான
வில்லாற்றல்   மிக்க   வீரனாகிய    இராமன்    மனம்  தெளியும்படி;
“அம்சொலாள்   இருந்தாள்   கண்டேன்”    என்ற    யான் -
‘அழகிய    சொல்லை   உடைய   சீதை  இருந்தாள்,  (இலங்கையில்)
கண்டேன்” என்று  கூறி   மகிழ்வித்த  நான்; ‘அரக்கன்   கொல்லத்
துஞ்சினாள்’  என்றும்     சொல்ல
 -  இப்போது   ‘அரக்கனாகிய
இந்திரசித்து     கொல்லச்   சீதை   இறந்தாள்’  என்று  சொல்லவும்;
தோன்றினேன்   தோற்றம்  ஈதால் - தோன்றினேன், என்பிறப்பின்
பயன் இத்தகையதாயிற்றே!
 

                                                 (49)
 

8889.

‘அருங்  கடல் கடந்து,  இவ் ஊரை அள் எரி மடுத்து,
                                    வெள்ளக்
கருங் கடல் கட்டி, மேருக் கடந்து ஒரு மருந்து காட்டி,
“குரங்கு    இனி   உன்னோடு   ஒப்பது   இல்” என,
                           களிப்புக் கொண்டேன்;
பெருங் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது, என்
                            அடிமைப் பெற்றி!
 

அருங்கடல்  கடந்து - கடத்தற்கு அரிய கடலைக்  கடந்து வந்து;
இவ்  ஊரை  அள் எரிமடுத்து - இவ்ஊரைச் செறிந்த நெருப்பினால்
கொளுத்தி; வெள்ளக் கருங்கடல் கட்டி -நீர் நிறைந்த கரிய கடலுக்கு
அணை கட்டுவதில் உதவி செய்து; மேருக்கடந்து ஒருமருந்து காட்டி-
மேருமலையைத் தாண்டிச் சென்று ஒப்பற்ற  மருந்தினைக்  கொணர்ந்து
காட்டி;   “குரங்கு    இனி   உன்னோடு  ஒப்பது  இல்”  எனக்
களிப்புக கொண்டேன்
 - “குரங்குகளிலே இனி  உன்னோடு  ஒப்பக்
கூறக் கூடிய குரங்கு   ஒன்றுமி்ல்லை”  எனப்  பிறர்  புகழக்  கேட்டுக்
களிப்புக்கொண்டேன்;  என்   அடிமைப்   பெற்றி   பெருங் கடல்
கோட்டம் தேய்த்தது ஆயது
- இத்தகைய  என்  அடிமைத் தன்மை
பெரிய  கடலில்   தேய்த்து  விட்ட   கோட்டம்  போலப்  பயனற்றுப்
போய் விட்டதே!
 

                                                 (50)