பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 743

8890.

‘விண்டு நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர்
                                விட்டிலாதேன்,
கொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்!
                               எதிரே கொல்லக்
கண்டு நின்றேனே நன்று; என் கையினின்,
                         கலத்தின் வெண் சோறு
உண்டு நின்று, உய்ய வல்லேன்; எளியனோ?
                            ஒருவன் உள்ளேன்!’
 

கொண்டு  நின்றானைக்  கொல்லக்  கூசினேன்!  -  நின்னைக்
கொல்லுதற்காக   கையில்   கொண்டு  நின்ற  அரக்கனைக்  கொல்லக்
கூசினேன்; எதிரே  கொல்லக் கண்டு நின்றேனே - ஆனால்   என்
கண் எதிரே  உன்னைக்  கொல்லக்  கண்டு   நின்றேனே!    விண்டு
நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் விட்டிலாதேன்
 - என்  உடம்பு
நின்று பிளந்து இந்தச் சிறிதாகிய என்னுயிரை    விடத்துணியாதவனாய்;
என்கையினின்   கலத்தின்  வெண்  சோறு
 -  இன்னும் கையினால்
கலத்திலுள்ள  வெண்சோற்றினை;  உண்டு  நின்று  உய்ய வல்லேன்
நன்று
  -  உண்டு   நின்று   உயிர்    வாழ்வதற்கு   வல்லவனாய் -
வாளாநின்றேன்,         நல்லதே!      எளியனோ       ஒருவன்
உள்ளேன்
- இத்தகைய   யான்   எளியவனோ?   ஒப்பற்றவனாகவே
உள்ளேன்.
 

                                                 (51)
 

8891.

என்ன  நின்று  இரங்கி,  ‘கள்வன்  “அயோத்திமேல்
                              எழுவென்” என்று
சொன்னதும் உண்டு; போன சுவடு உண்டு;
                           தொடர்ந்து செல்லின்,
மன்னன் இங்கு  உற்ற தன்மை  உணர்கிலன் ஓரேன்;
பின்  இனி  முடிப்பது  யாது?’ என்று   இரங்கினான்,
                             உணர்வு பெற்றான்.
 

என்ன  நின்று  இரங்கி, கள்வன் “அயோத்திமேல் எழுவேன்”
என்று - என்று
சொல்லி  நின்று   அனுமன்   இரங்கி,  கள்வனாகிய
இந்திரசித்து, “அயோத்திமேல்   எழுகின்றேன்”  என்று;  சொன்னதும்
உண்டு போன சுவடு உண்டு
 -  சொன்னவாறே அத்திசை நோக்கிப்
போன  அடையாளமும்  உண்டு;   தொடர்ந்து  செல்லின் மன்னன்