இங்கு உற்றதன்மை உணர்கிலன் - அவனைத் தொடர்ந்து நான் போனால் இராமன் இங்கு நடந்ததை உணரவழியில்லை; வருவது ஓரேன் பின் இனி முடிப்பது யாது? - இனி விளைவதை அறியமுடியாதவனாக இருக்கின்றயான், தொடர்ந்து செய்து முடிக்க வேண்டுவது எதனை? என்று இரங்கினான் உணர்வு பெற்றான் - என்றுமனமிரங்கித் துன்புற்றவனாய்ப் பின் உணர்வினைப் பெற்றான். | (52) | அனுமன் இராமனிடம் செய்தி கூறல் | 8892. | ‘உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை ஒருவனோடும், இற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின், எண்ணம் எண்ணி, சொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலன் துணிவிற்று’ என்னா, பொன் தடந் தோளன், வீரன் பொன் அடி மருங்கில் போனான். | உற்றதை உணர்த்தி பின்னை இற்று உறின் - நடந்ததை இராமனுக்குக் கூறிப் பிறகு (அவன்) உயி ர் நீங்கப் பெறுவானாயின்; உலகுடை ஒருவனோடும் இற்று மாள்வென் - உலகுடைய அப்பிரானோடு, யானும் அழிந்தொழிவேன்; அன்று எனின் எண்ணம் எண்ணி சொற்றது செய்வென் - அங்ஙனமில்லையாயின் அவன் கருத்தை எண்ணி அறிந்து அவன் சொன்னதைச் செய்வேன்; வேறு பிறிது ஓர் இலன் துணிவிற்று என்னா - வேறு பிறிது ஒரு செயலும் யான் உடையனல்லேன்; இதுவே துணிவு என்று;பொன் தடந்தோளன், வீரன் பொன் அடி மருங்கில் போனான் - பொன்னிறமான பெரிய தோளை உடைய அனுமன் வீரனாகிய இராமனது அழகிய திருவடிகளின் மருங்கில் சென்றான். | (53) | 8893. | சிங்கஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான், அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான், |
|
|
|