பக்கம் எண் :

746யுத்த காண்டம் 

                   இராமனும் வானரர் முதலியோரும் உற்ற துயரம்
 

8895.

துடித்திலன்;  உயிர்ப்பும்   இல்லன்;   இமைத்திலன்;
                             துள்ளிக் கண்ணீர்
பொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன்றிலன்; பொருமி,
                                    உள்ளம்
வெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்ந்திலன்;
                          வியர்த்தான்அல்லன்;
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர், அமரரேயும்.
 

துடித்திலன்;    உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் - (அனுமன்
கூறக்கேட்ட இராமன்) துடிதுடித்தானில்லை,   பெருமூச்சு விடவுமில்லை,
கண்கள் இமைக்கப் பெறவுமில்லை;துள்ளிக் கண்ணீர்  பொழிந்திலன்
யாதும் ஒன்றும் புகன்றிலன்
- கண்ணீர்த்துளிகளைத் தோற்றுவிக்கவும்
இல்லை, யாதொன்றும் பேசவுமில்லை;பொருமி உள்ளம் வெடித்திலன்,
விம்மிப்  பாரின்   வீழ்ந்திலன்   வியர்த்தான் அல்லன்
- தேம்பி
இதயம் பிளக்கவும்  இல்லை;  பெருந்துயரால்  வியர்க்கப்  பெறவும்
இல்லை; அடுத்து  உள துன்பம் யாவும் அமரரேயும் அறிந்திலர்
-
அவனுக்கு  அடுத்துள்ள  துன்பம்  அனைத்தையும்   தேவர்கள்  கூட
அறிந்தாரல்லர்.
 

                                                  (56)
 

8896.

சொற்றது கேட்டலோடும், துணுக்குற, உணர்வு சோர,
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா,
கற்பகம் அனைய வள்ளல் கருங் கழல் கமலக்
                                   கால்மேல்,

வெற்புஇனம் என்ன வீழ்ந்தார், வானர வீரர் எல்லாம்.
 

சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர - அனுமன்
சொன்னதைக்    கேட்ட   அளவில்   மனம்   திடுக்கிட,    உணர்வு
சோர்ந்துவிட; நல் பெருவாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்த -
நல்ல  பெரிய  வாடைக்   காற்றால்  மோதுண்ட  மரங்களைப்   போல
நடுக்கம் அடைந்து; கற்பகம்  அனைய  வள்ளல் கருங்கழல் கமலக்
கால் மேல்
- கற்பக மரம்  போன்ற வள்ளல் தன்மையுடைய  இராமனது
பெரிய  வீரக் கழல் அணிந்த  கமல மலர் போன்ற  பாதங்களின் மேல்;
வெற்பு இனம் என்ன வீழ்ந்தார்