வானரவீரர் எல்லாம் - மலைகளின் கூட்டம் போல வானர வீரர்கள் எல்லாம் வீழ்ந்தார்கள். | (57) | 8897. | சித்திரத் தன்மை உற்ற சேவகன், உணர்வு தீர்ந்தான், மித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப் பேசான், பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க, உயிர் இலன் என்னச் சாய்ந்தான். | சித்திரத் தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் - சித்திரத்தின் தன்மை அடைந்திருந்த வீரனாகிய இராமன் உணர்வு நீங்கப் பெற்றவனாய்; மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவப் பேசான் - நண்பர்களின் முகங்களைப் பாராதவனாய். இலக்குவன் கேட்டதற்கும் பதில் கூறாதவனாய்; பித்தரும் இறைபொறாத பேர் அபிமானம் என்னும் - பித்தர்களாய் உள்ளவர்களும் சிறிதும் பொறுக்கவியலா பெரிய அபிமான உணர்ச்சி என்கின்ற; சித்திரம் மார்பில் தைக்க உயிர் இலன் என்னச சாய்ந்தான் - படைக்கலம் மார்பில் பாய்தலால் உயிர்நீங்கினன் என்னுமாறு நிலத்தில் சாய்ந்தான். | (58) | 8898. | நாயகன் தன்மை கண்டும், தமக்கு உற்ற நாணம் பார்த்தும், ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும், வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி, தாயினை இழந்த கன்றின், தம்பியும் தலத்தன் ஆனான் | நாயகன் தன்மை கண்டும் தமக்குற்ற நாணம் பார்த்தும் - தலைவனாகிய இராமனின் நிலையைக் கண்டும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நாணத்தக்க நிலையை நோக்கியும்; ஆயினகருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும் - கை கூடிவந்த செயல் மீண்டும் அழிந்து போன நிலையினைப் பார்த்தும்; வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி - வாயும் மனமும் கண்ணும் உடம்பும் உணர்வழிந்து வாடி; தாயினை இழந்தகன்றின் தம்பியும் |
|
|
|