தலத்தன் ஆனான் - தாய்ப் பசுவை இழந்த கன்றினைப் போலத் தம்பி இலக்குவனும் தரையில் சாய்ந்தான். | (59) | வீடணன் கொண்ட ஐயம் | 8899. | தொல்லையது உணரத் தக்க வீடணன், துளக்கம் உற்றான், எல்லை இல் துன்பம் ஊன்ற, இடை ஒன்றும் தெரிக்கிலாதான், ‘“வெல்லவும் அரிது; நாசம் இவள்தனால் விளைந்தது” என்னா, கொல்வதும் அடுக்கும்’ என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான். | தொல்லையது உணரத்தக்க வீடணன், துளக்கம் உற்றான் - ஒருவரின் இயல்பினை உணரத் தக்க அறிவுடையவனான வீடணன் நடுக்கமுற்றவனாய்; எல்லையில் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் - பெருந்துன்பம் அழுத்துதலால் அதற்கிடையில் ஒன்றும் தெரியாதவனாய்; ‘வெல்லவும் அரிது நாசம் இவள்தனால் விளைந்தது’ என்னா - “வெல்வதும் அரிதாக உளது அழிவும் இவளால் உண்டாயிற்று” என்று; கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் - இந்திரசித்து சீதையைக் கொன்றிருக்கவும் கூடும் என மனத்தில் ஒரு சந்தேகத்தைக் கொண்டான். | (60) | 8900. | சீத நீர் முகத்தின் அப்பி, சேவகன் மேனி தீண்டி, போதம் வந்து எய்தற்பால யாவையும் புரிந்து, பொன் பூம் பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும், வேதமும் காணா வள்ளல் விழித்தனன், கண்ணை மெல்ல. | சீதநீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி - (வீடணன்) குளிர்ந்த நீரை இராமனின் முகத்தில் தெளித்து அப்பிரானின் திருமேனியைத் தன் கையால் தீண்டி; போதம், வந்து எய்தற்பால யாவையும் புரிந்து - உணர்வு வருதற்குரிய எல்லாச் செயல்களையும் செய்து; பொன்பூம் பாதமும் கையும் மெய்யும் பற்றினன் - |
|
|
|