பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 75

ஓர்     ஏறு ஒப்பு  உளவாம் - சிவபிரானுக்கு  உளதாகிய  ஒப்பற்ற
இடபத்தை  ஒப்பாக  உள்ளனவாகிய;  வார் ஏறுவன் வயப்பரி - வார்
பூண்ட  வலிய  குதிரைகள்;  ஆயிரம்  பூணுறு  திண்தேர் ஏறுதி  -
ஆயிரம்  பூட்டப்பட்ட வலிய தேரில் ஏறுக, தந்தனென் - அதனை
உனக்குத் தந்தேன்.

போர்  ஏறிட ஏறுவ, சிவற்கு ஓர் ஏறு ஒப்பு உளவாம். வார் ஏறுவன்
வயப்பரி  ஆயிரம்  பூணுறு  திண்தேர்  எனக்  கூட்டி உரைக்க. ஏறு -
காளை.  இத்தேர்  இராவணனுக்குப்  பிரமன்  தந்தது  என  உரைப்பர்.
அது  கருதியே  திண்  தேர் என்றனன் எனவும்  கருதுவர்.  திண்தேர்,
வெந்திறல்  -  பண்புத்  தொகைகள்,  ஏறுதி  -  முன்னிலை  ஒருமை
வினை முற்று.

                                                   (17)

7744.‘ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல, அடும்

கோ மத்த நெடுங் கரி கோடியோடும்,
போம், அத்தனை வெம் புரவிக் கடலே,’

ஆம்  அத்தனை  மாவுடை  அத்தனை  தேர்  -  பொருந்திய
அத்தனை   (ஆயிரம்)  குதிரைகள்  பூண்ட   அத்தனை   தேர்களும்;
சேமத்தன    பின்புடை   செல்ல   -   பாதுகாவலாகப்   பின்னும்
பக்கங்களிலும்  செல்ல; அடும்  கோ  மத்த  நெடுங்கரி - கொல்லும்
தன்மை  உள்ள  தலைமைத்   தன்மை  வாய்ந்த  மதம்   பொருந்திய
நெடிய   யானைகள்;   கோடியொடும்   -  கோடியோடு;  அத்தனை
வெம்புரவிக் கடலே போம்
- அத்தனை கொடிய புரவிக் கடலும் (உன்
உடன்) வரும்.

எல்லாத் தேர்களும் குதிதைகள் பூட்டப்பட்டு, மதங்கொண்ட நெடிய
யானைகள்   கோடியோடு,   புரவிக்   கடலும்  உன்   உடன்  வரும்
என்கிறான்  இராவணன், பின்புடை - உம்மைத் தொகை. புரவிக்  கடல்
- உருவகம்.

                                                   (18)

7745.என்றே விடை நல்க, இறைஞ்சி எழா
வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள்
பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின்
நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால்.

என்றே     விடை  நல்க -  என்று (இராவணன் கூறி) விடை தர;
இறைஞ்சி  எழா  -  (அதிகாயன்) வணங்கி எழுந்து; வன்தாள் வயிரச்
சிலை கைக்கொடு
- வலிய முனையை உடைய உறுதியான