8902. | ‘முடியும் நாள் தானே வந்து முற்றினால், துன்ப முந்நீர் படியுமாம், சிறியோர் தன்மை; நினக்கு இது பழியிற்றாமால்; குடியும் மாசு உண்டதுஎன்னின், அறத்தொடும் உலகைக் கொன்று, கடியுமாறு அன்றி, சோர்ந்து கழிதியோ, கருத்து இலார்போல்? | முடியும் நாள் தானே வந்து முற்றினால் - ஒருவருக்கு முடிவுநாள் (ஊழ்வினையால்) தானே வந்து சேர்ந்தால்; துன்ப முந்நீர் படியுமாம் சிறியோர் தன்மை - துன்பமாகிய கடலில் அழுந்தி விடும் தன்மை சிறியோர் தன்மையாகும்; நினக்கு இது பழியிற்று ஆமால் - (பெருந்தன்மையுடைய) நினக்கு (துன்பக்கடலில் அழுந்துவது) இத்தன்மை பழியினைத் தருவதாகும்; குடியும் மாசு உண்டது என்னின் - (அறத்துவழிப்படும்) நமது குடியும் மாசுபட்ட தென்றால்; அறத்தொடும் உலகைக் கொன்று கடியுமாறு அன்றி - (பயன்படாத)தருமத்தையும் (தகாத செயலைப் பார்த்து நின்ற) உலகத்தையும் அழித்து ஒழிப்பதல்லாமல்; கருத்து இலார்போல் சோர்ந்து கழிதியோ - கருத்தில்லாதவர்போல மனம் சோர்ந்து கிடப்பாயோ? | (63) | 8903. | ‘தையலை, துணை இலாளை, தவத்தியை, தருமம் கற்பின் தெய்வதம்தன்னை, மற்று உன் தேவியை, திருவை, தீண்டி, வெய்யவன் கொன்றான்என்றால், வேதனை உழப்பது, இன்னம் உய்யவோ? கருணையாலோ? தருமத்தோடு உறவும் உண்டோ? | தையலை, துணை இலாளை, தவத்தியை - மெல்லியலாகிய பெண்ணை, துணையில்லாதவளை, தவ நிலையில் இருப்பவளை; தருமக் கற்பின் தெய்வம் தன்னை மற்று உன் தேவியை - அறநெறியாகிய கற்பின் தெய்வமாக இருப்பவளை, அறத்தைக்காக்கும் நின்தேவியை; திருவைத் தீண்டி வெய்யவன் கொன்றான் என்றால் - திருமகள் போல்பவளை கையால் தீண்டி |
|
|
|