கொடியவனாகிய இந்திர சித்து கொலை செய்தான் என்றால்; வேதனை உழப்பது இன்னம் உய்யவோ? கருணையாலோ? - (அறத்தோடு இவ்வரக்கர் குலத்தையும் வேரோடு அழிக்காமல்) வேதனைப்படுவது, இன்னும் உயிர் உய்ந்து வாழ வேண்டும் என்பதாலோ அன்றிக் கருணையாலோ? தருமத்தோடு உறவும் உண்டோ? - இனித் தருமத்தோடு நமக்கு உறவென்பது உண்டோ? (இல்லை என்றவாறு). | (64) | 8904. | ‘அரக்கர் என், அமரர்தாம் என், அந்தணர்தாம் என், அந்தக் குருக்கள் என், முனிவர்தாம் என், வேதத்தின் கொள்கைதான் என்; செருக்கினர் வலியர் ஆகி, நெறி நின்றார் சிதைவர்என்றால், இருக்குமிது என்னாம், இம் மூன்று உலகையும் எரி மடாதே? | செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார சிதைவர் என்றால் (அறநெறிவிடுத்து) செருக்கினவர் வலியவர்களாகி, அறநெறி நின்றோர் சிதைவார்களென்றால்;அரக்கர் என், அமரர்தாம் என் அந்தணர்தாம் என் - (நமக்குஇனி) அரக்கர்கள் என்ன, அமரர்கள் என்ன, அந்தணர் தாம் என்ன; அந்தக் குருக்கள் என் முனிவர் தாம் என், வேதத்தின் கொள்கைதான் என் - அந்தக் குருக்கள் என்ன, முனிவர்தாம் என்ன, வேதத்தின் கொள்கைதானென்ன (இவர் யாவரும் ஒருங்கே அழியுமாறு) ; இம்மூன்று உலகையும் எரிமடாதே இருக்குமிது என்னாம் - இந்த மூன்று உலகையும் நெருப்புக்கு இரையாக்காது வருந்திக் கொண்டிருப்பது என்ன பயனைத் தரும்? | (65) | 8905. | ‘முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு, எழுவதே! அமரர் இன்னம் இருப்பதே! அறம் உண்டு என்று தொழுவதே! மேகம் மாரி சொரிவதே! சோர்ந்து நாம் வீழ்ந்து அழுவதே! நன்று, நம்தம் வில் தொழில் ஆற்றல் அம்மா! |
|
|
|