பக்கம் எண் :

752யுத்த காண்டம் 

இன்ன ஏழ் உலகம் முழுவதும் - (சீதையை அரக்கன் கொன்றபின்
இன்னமும், ஏழுஉலகங்கள்  முழுவதும்;  முறை முறை  செய்கைமேல்
மூண்டு எழுவதே
 - ஒழுங்காகத்  தத்தம் செயற்பாட்டின் மீது  மூண்டு
எழுவதா?  அமரர்   இன்னும்  இருப்பதே  அறம்  உண்டு என்று
தொழுவதே
 - தேவர்கள் இன்னமும்  இருப்பதா? அறம்  என்ற  ஒன்று
உண்டு  என எண்ணி   அதனைத்தொழுது கொண்டிருப்பதா?  மேகம்
மாரி சொரிவதே!  சோர்ந்து  நாம்  வீழ்ந்து  அழுவதே!
- இனியும்
மேகம் மழையைப் பொழிவதா? (இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு)
நாம் சோர்ந்து வீழ்ந்து அழுது கொண்டிருப்பதா?நம்தம் வில் தொழில்
ஆற்றல்  நன்று  அம்மா!
 - நம்முடைய வில் தொழில்  வலிமை மிக
நன்றாயிருக்கின்றது!
 

இச்செய்யுளில்   ஏகார  `வினாக்கள்  எதிர்மறைப்  பொருள்காட்டி
நின்றன.   “இன்னும் எல்லா லோகமும்   அழியா  மலிருக்கின்றனவே
என்று  சீற்றமானார் இளவல்”  என்பது பழைய உரை.  முறையற்ற  ஒரு
செயல்   நடந்த   பின்பு   இனி முறையான  செயல்கள்   நடப்பதாக
நினைத்து  நம்  வில்வலிமறந்து சோர்ந்து  புலம்புவதில்  பொருளில்லை
என்கிறான் இலக்குவன். அம்மா - வியப்பிடைச் சொல்.
 

                                                 (66)
 

8906.
 

‘புக்கு, இவ் ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து,
                               அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு, வானோர் உலகு எலாம் தீத்து,
                                        தீரத்
தக்க நாம், கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இரு கை
                                       நாற்றி,
துக்கமே உழப்பம்என்றால், சிறுமையாய்த் தோன்றும்
                                     அன்றே?
 

புக்கு,  இவ்வூர் இமைப்பின் முன்னம்  பொடிபடுத்து - புகுந்து
இந்த  இலங்கையை இமைப்பொழுதில் பொடிபடும்   படி அழித்துவிட்டு;
அரக்கன் போன திக்கு  எலாம்  சுட்டு
 -  அரக்கன் போன திசை
எல்லாவற்றையும்   சுட்டு;  வானோர் உலகு எலாம் தீத்து தீரத்தக்க
நாம்
- வானவர்   உலகம்  முழுவதையும்  அழித்து   அழியத்  தக்க
நாம்;    கண்ணீர்   ஆற்றி,   தலை  சுமந்து  இருகை நாற்றி  -
(அவற்றைச் செய்யாது)   கண்ணீர்  பெருக்கிக்கொண்டு    தலையையும்
சுமந்து  கொண்டு, இருகைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு; துக்கமே
உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும்