அன்றே - துக்கப்பட்டுக் கொண்டே இருப்போம் ஆயின் இது பிறர் கண்ணுக்குச் சிறுமையாய்ப் படுமன்றோ, | (67) | 8907. | ‘அங்கும், இவ் அறமே நோக்கி, அரசு இழந்து, அடவி எய்தி, மங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது வாழ்ந்தோம்; இங்கும், இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை நோக்கி, பொங்கு வன் தளையில் பூட்டி, ஆட்செயப் புகல்வர் அன்றே? | அங்கும், இவ் அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி - அவ்விடத்தும் (அயோத்தியிலும்) அந்தத் தருமத்தையே நோக்கி அரசினை இழந்து கானகத்தை அடைந்து; மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் - சீதையை வஞ்சகனாகிய இராவணன் கவர்ந்து செல்லவும் தருமத்தின் வரம்பினைக் கெடாது வாழ்ந்தோம்; இங்கும் இத்துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி - (சீதை கொலைக்குப் பின்னும்) இந்த இலங்கையிலும் இந்தத் துன்பம் அடைந்து கொண்டு இருப்போமாயின் நம் எளிமையைப் பார்த்து; பொங்குவன் தளையில் பூட்டி ஆட் செயப் புகல்வர் அன்றே - (நம்பகைவர்) வலிமைமிக்க தளையில் நம்மைப் பூட்டி அழைத்துச் சென்று அடிமை செய்யுமாறு சொல்லுவார்கள் அன்றோ? | (68) | 8908. | ‘மன்றல் அம் கோதையாளைத் தம் எதிர் கொணர்ந்து, வாளின் கொன்றவர்தம்மைக் கொல்லும் கோள் இலர், நாணம் கூரப் பொன்றினர்’ என்பர், ஆவி போக்கினால்; பொதுமை பார்க்கின், அன்று, இது கருமம்; என், நீ அயர்கின்றது, அறிவு இலார்போல்?’ | ஆவி போக்கினால் - இப்பொழுது துன்பத்தினால் உயிர் விடுவோமாயின்; ‘மன்றல் அம் கோதையாளைத் தம் எதிர் கொணர்ந்து - மணம்மிக்க அழகிய கூந்தலை உடைய சீதையைத் |
|
|
|