பக்கம் எண் :

756யுத்த காண்டம் 

                                      இராமன் மனம் அழிதல்
 

8912.

மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி,
‘எற்றுதும், அரக்கர்தம்மை இல்லொடும் எடுத்து’என்று,
                                        ஏகல்
உற்றனர்; உறுதலோடும், ‘உணர்த்துவது உளது’
                                என்று உன்னா,
சொற்றனன் அனுமன், வஞ்சன் அயோத்திமேல்
                                போன சூழ்ச்சி.
 

மன்னனின்   முன்னம்  -  சுக்கிரீவ  மகாராஜாவுக்கு முன்னால்;
மற்றைய  வீரர் எல்லாம்  -  ஏனைய வானர வீரர்கள் அனைவரும்;
தாவி  -  (இலங்கைமேல்) புறப்பட்டு; ‘அரக்கர் தம்மை இல்லொடும்
எடுத்து   எற்றுதும்’  என்று
  - ‘அரக்கர்களை  அவர்கள்  வாழும்
வீட்டோடு தூக்கி மோதிவிடுவோம்’ என்று சொல்லி; ஏகல் உற்றனர்-
செல்லத்  தொடங்கினார்கள்;  உறுதலோடும்  -  அப்படிச்  செல்லத்
தொடங்கியவுடனே; அனுமன் -; ‘உணர்த்துவது உளது’  என்று  உன்னா
-‘இவர்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தி  ஒன்று இருக்கிறது’  என்று
(மனத்தில்) கருதி; வஞ்சன் -  வஞ்சனையுடையவனான   இந்திரசித்து;
அயோத்தி மேல் போன சூழ்ச்சி - அயோத்தியை  நோக்கிப் போர்
செய்யச்  (செல்வதாகச்)  சென்ற தீய ஆலோசனையை; சொற்றனன் -
எடுத்துச் சொன்னான்.
 

இலங்கையை    அழிப்பதினும்   மிக   முக்கியம்   அயோத்தியில்
உள்ளாரைப் பாதுகாப்பது ஆதலின்  இதுகாறும் சொல்லாதுவிட்ட  அந்த
இந்திரசித்துவின் செயலை விரைந்து சொன்னான்.
 

                                                 (73)
 

8913.

தாயரும் தம்பிமாரும் தவம்புரி நகரம் சாரப்
போயினன் என்ற மாற்றம் செவித்துளை புகுதலோடும்,
மேயின அடியின் நின்ற வேதனைகளைய, வெந்த
தீயிடைத் தனிந்தது என்ன, சீதைபால் துயரம்
                                   தீர்ந்தான்.
 

தாயரும் தம்பி  மாரும்  தவம்புரிநகரம்  சார  -  தாய்மாரும்,
தம்பிமாரும், தவம்   புரிந்து  கொண்டிருக்கும்  அயோத்தி   நகருக்கு;
போயினன் என்ற மாற்றம் செவித் துளை புகுதலோடும் -அரக்கன்
போயினன்  என்ற சொல் (இராமனது)  செவித்துளையில்  புகுந்தவுடன்;
மேயின அடியின் நின்ற வேதனை, களைய வெந்த -