முன்னம் அடிபட்டதனால் உண்டானதுன்பம் மிகுதியாக வெந்த; தீயிடைத் தணிந்தது என்ன சீதைபால் துயரம் தீர்ந்தான் - தீபட்டதனால் தணிந்தது போல சீதை காரணமாக ஏற்பட்ட துயரத்தினின்றும் தீர்ந்தான். |
(74) |
8914. | அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று, அனந்தர் நீங்கி எழுந்தனன் என்ன, துன்பக் கடலின்நின்று ஏறி, ஆறாக் கொழுந்து உறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட, உழுந்து உருள் பொழுதும் தாழா விரைவினான், மறுக்கம் உற்றான். |
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி நின்று, அனந்தர் நீங்கி - ஆழமான பாலின் வெள்ளத்தை உடைய கடலிலிருந்து உறக்கம் நீங்கி; எழுந்தனன் என்ன துன்பக் கடலின் நின்று ஏறி - எழுந்தவன் போலத் துன்பமாகிய கடலினின்றும் ஏறி; ஆறாக் கொழுந்து உற கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட - ஆறாததாய்க் கொழுந்துவிட்டு எரிகின்ற கோபத்தீயும் நடுக்கமும் உள்ளத்தைச் சேர; உழுந்து உருள் பொழுதும் தாழா விரைவினான் மறுக்கம் உற்றான் - உழுந்து உருள் பொழுதுங் கூடத் தாமதித்தலில்லாத விரைந்த முயற்சியை உடையவனான இராமன் கலக்கம் அடைந்தான். |
(75) |
8915. | ‘தீரும் இச் சீதையோடும் என்கிலது அன்று, என் தீமை; வேரொடு முடிப்பது ஆக விளைந்தது; வேறும் இன்னும் யாரொடும் தொடரும் என்பது அறிகிலேன்; இதனை, ஐய! பேரிட அவதி உண்டோ? எம்பியர் பிழைக்கின்றாரோ? |
என் தீமை தீரும் இச்சீதையோடும் என்கிலது அன்று - எனது தீவினை, இச்சீதையோடும் தீர்ந்து விடும் என்று சொல்லக்கூடியதாகவும் இல்லை; வேரொடு முடிப்பது ஆக விளைந்தது - எம் |