பக்கம் எண் :

758யுத்த காண்டம் 

குலத்தையே   வேரோடு     முடிப்பதாக  விளைந்துள்ளது;   வேறும்
இன்னும் யாரொடும் தொடரும் என்பது  அறிகிலேன்
-  இன்னும்
வேறு யாரோடு தொடரும் என்பதை அறியேன்;  ஐய! இதனை பேரிட
அவதி   உண்டோ?   எம்பியர்   பிழைக்கின்றாரோ?
 -  ஐயா!
இத்துன்பத்தை  வாராமல்   பெயர்க்கும் வழியும்   உண்டோ?  அங்கு
என் தம்பிமார் உயிரோடு இருக்கின்றாரோ?
 

                                                 (76)
 

8916.

‘நினைவதன் முன்னம் செல்லும் மானத்தில் நெடிது
                                 போனான்,
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான்;
                           வினையேன் வந்த
மனை பொடி பட்டது, அங்கு; மாண்டது, தாரம்
                                   ஈண்டும்;
எனையன தொடரும் என்பது உணர்கிலேன்!
                            இறப்பும் காணேன்!
 

நினைவதன் முன்னம்  நெடிது செல்லும் மானத்தில் போனான்-
நினைவதற்கு  முன்பே  நெடிது தூரம் செல்லவல்ல  புட்பகவிமானத்தில்
போனவனாகிய  இந்திர  சித்து;   வினை  ஒரு  கணத்தில்  முற்றி
மீ்ள்கின்றான்  
 -   தான்  நினைத்த  காரியத்தை   கணப்பொழுதில்
முடித்துக்கொண்டு மீள்வதற்குரியவனாவான்; வினையேன் வந்த  மனை
அங்கு  பொடிபட்டது
 - தீவினையேனாகிய யான் பிறந்த வீடு  அங்கு
பொடிபட்டு  அழிந்தது; ஈண்டும் தாரம் மாண்டது - இங்கும்  மனைவி
மடிந்தாள்; எனையன தொடரும்  என்பது  உணர்கிலேன்! இறப்பும்
காணேன்
-  இன்னும்  எத்தகைய துன்பங்கள்   என்னைத் தொடரும்
என்பதனையும்   உணரமுடியாதவனாக  இருக்கின்றேன்.  (இப்படிப்பட்ட
நான் இறந்து படலாமென்றாலோ) இறப்பும் வரக்காணேன்.
 

                                                 (77)
 

8917.

‘தாதைக்கும், சடாயுவான தந்தைக்கும், தமியள் ஆய
சீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது, ஒருவன்
                                       தீமை;
பேதைப் பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழைப்பு
                                      இலாத
காதல் தம்பியர்க்கும், ஊர்க்கும், நாட்டிற்கும்,
                            காட்டிற்று அன்றே.