பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 759

ஒருவன்   தீமை   தாதைக்கும்  சடாயுவான  தந்தைக்கும் -
ஒருவனாகிய   என்னுடைய    தீமை,    என்னுடைய    தந்தைக்கும்,
(என்னைமகனாக ஏற்ற)   சடாயுவான   தந்தைக்கும்;  தமியள்  ஆய
சீதைக்கும் கூற்றம் காட்டித் தீர்ந்திலது
-தனிமைப்பட்ட சீதைக்கும்,
மரணத்தை விளைவித்தும் நீங்காமல்; பேதைப் பெண் பிறந்து பெற்ற
தாயர்க்கும்
- பேதமை வாய்ந்த பெண் பிறவியாய்ப் பிறந்து என்னைப்
பெற்றதைத் தவிர  வேறு  குறையற்ற  தாயர்க்கும்;  பிழைப்பு இலாத
காதல்  தம்பியர்க்கும்
- எந்தத்   தவறும்    இல்லாத  அன்புடைய
தம்பிமார்க்கும்;  ஊர்க்கும்,  நாட்டிற்கும்   காட்டிற்று    அன்றே
- அயோத்தி  என்னும்  எமது  ஊரக்கும், எமது  கோசல  நாட்டிற்கும்
இறுதியைக் காட்டி விட்டது.
 

                                                 (78)
 

8918.

‘உற்றது ஒன்று உணரகில்லார்; உணர்ந்து வந்து
                                உருத்தாரேனும்,
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து, அவன் கொன்று
                                    வீழ்த்தால்,
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன்; மருந்து
                                       நல்கக்
கொற்ற மாருதி அங்கு இல்லை; யார் உயிர்
                              கொடுக்கற்பாலார்?
 

உற்றது   ஒன்றும்   உணர   கில்லார் - இங்கு   நடந்தவற்றை
எதனையும் அறியாதவர்களாகிய   பரத   சத்துருக்கனர்     (துடுமென
இந்திரசித்து    சென்று தாக்கினால்) வீழ்ந்துபடுவர்; உணர்ந்து  வந்து
உருத்தாரேனும்
-   (இங்கு  நடந்தவற்றை  அறியாவிட்டாலும்)  பகை
கொண்டு   ஒருவன்  தாக்க   வருகின்றான்   என்பதனை   உணர்ந்து
கோபித்துப்   போர்  செய்யினும்; அவன் வெற்றி  வெம்பாசம் வீசி
விசித்துக்   கொன்று    வீழ்த்தால்
-    அவ்விந்திரசித்து தனக்கு
வெற்றியைத் தருகின்ற கொடுமை பொருந்திய  நாகபாசத்தை வீசிக்கட்டி
அவர்களைக் கொன்று வீழ்த்தினால்; மற்றை வெம்புள்ளின் வேந்தன்
வருகிலன்
 -  (அப்பாசத்திற்குப்  பகையான)  கொடிய கருடன் அங்கு
வரமாட்டான்; மருந்து நல்கக்   கொற்ற   மாருதி   அங்குஇல்லை
-  (அவன் வராவிட்டாலும்) மருத்து மலையைக் கொணர்ந்து  கொடுக்க
வெற்றி     வாய்ந்த  அனுமனும்   அங்கு   இல்லை;    யார் உயிர்
கொடுக்கற்பாலார்?
  -  அவர்கட்கு உயிர் கொடுக்கத்தக்கார் யாருளர்?
(ஒருவருமில்லை).
 

                                                 (79)