வில்லைக் கையில் கொண்டு; வாள் பொன் தாள் கவசம் புகுதா - ஒளி பொருந்திய பொன்னால் செய்யப்பட்ட கவசத்தினுட்புகுந்து, முகிலின் நின்றான் - கருமுகில் போல் நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால் - (அத்தோற்றத்தைப் பார்த்து) தேவர்கள் நடுங்கி உடல் தளர்ந்தனர்.
|
எழா - எழுந்து, பொன் தாள் கவசம் புகுதா - பொன்னால் ஆகிய கவசத்தை அணிந்து, நெளிதல் - நடுங்கி உடல் தளர்தல், முகிலின் நின்றான் - அதிகாயன் கரு நிறத்தோடு வில்லைக் கையில் கொண்டிருத்தலின் இவ்வுவமை என்க. எழா - புகுதா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். வயிரச்சிலை - பண்புத்தொகை. கொடு - இடைக்குறை.
|
(19)
|
7746. | பல் வேறு படைக்கலம், வெம் பகலோன் எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால், சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா - வில் வேறு தெரிப்புறும் மேனியினான்.
|
மாவில் வேறு தெரிப்புறும் மேனியினான் - யானையினும் (வேறாக) பெரிதாகத் தோன்றும் உடலை உடையவனான அதிகாயன்; சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற - கொடுஞ் சொற்களால் அதட்டுகிற வீரர் (தன்னைச்) சூழ்ந்துவர; பல்வேறு படைக்கலம் - பலவகையான வேறுபட்ட படைக்கலங்கள்; வெம்பகலோன் எல்வேறு தெரிப்ப - கடுமையான கதிரவன் ஒலியைக் காட்டிலும் வேறாக ஒளி வீசுபவைகளைக்; கொடு ஏகினனால் - (கையில்) கொண்டு சென்றான்.
|
மா - விலங்கு இங்கு யானை, தெழித்தல் - அதட்டுதல், எல் - ஒளி ஆல் - அசை. தெழிக்குநர் - வினையாலணையும் பெயர்.
|
(20)
|
அதிகாயனுடன் சென்ற படைகள்
|
7747. | இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி முழை அஞ்ச முழங்கின; மும் முறை நீர் குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள் மழை அஞ்ச முழங்கின, மா அரசே.
|
இழை அஞ்சன மால் களிறு - முகபடாம் பூண்ட மைக்கரு நிறமுடை மதம் மிக்க யானைகள்; முழை அஞ்ச முழங்கின எண் |