பக்கம் எண் :

760யுத்த காண்டம் 

     அயோத்திக்கு விரைய வழி உண்டோ? என இராமன் வினாவுதல்
 

8919.

‘மாக ஆகாயம் செல்ல, வல்லையின், வயிரத் தோளாய்!
ஏகுவான் உபாயம் உண்டேல், இயம்புதி; நின்ற எல்லாம்
சாக; மற்று, இலங்கைப் போரும் தவிர்க; அச் சழக்கன்
                                         கண்கள்
காகம் உண்டதற்பின், மீண்டும் முடிப்பென் என் கருத்தை’
                                        என்றான்.
 

வயிரத்தோளாய் - வயிரம்  போன்ற தோளை  உடைய வீடணனே!
மாக   ஆகாயம்   வல்லையின்   செல்ல  -  மாகம்   எனப்படும்
ஆகாயவழியே  விரைவாகச் செல்லவும்; ஏகுவான் உபாயம் உண்டேல்
இயம்புதி
  -   அயோத்தியைச்  சேரவும்    உபாயம்  இருக்குமாயின்
இயம்புக;நின்ற எல்லாம் சாக, மற்று இலங்கைப் போரும் தவிர்க -
எஞ்சி  நின்றனவெல்லாம்  அழியட்டும்  இலங்கைப்போரும்  நிற்கட்டும்;
அச்சழக்கன் கண்கள்  காகம்  உண்டதற்பின்  - அக்கொடியவனான
இந்திர சித்தின் கண்களைக்  காகம் உண்டபின்; மீண்டும் என்கருத்தை
முடிப்பென்  என்றான்
 -  மீண்டும் வந்து என் கருத்தை முடிப்பேன்
என்று இராமன் கூறினான்.
 

                                                 (80)
 

                         பரதனரைப் பற்றிய இலக்குவன் கணிப்பு
 

8920.

அவ் இடத்து, இளவல் ‘ஐய! பரதனை அமரின் ஆர்க்க,
எவ் விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று;
தெவ் இடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து
                                 அறாவோ?
வெவ் இடர்க் கடலின் வைகல்; கேள்’ என,
                            விளம்பலுற்றான்:
 

அவ்இடத்து,  இளவல்,   ஐய!   பரதனை  அமரின் ஆர்க்க -
(இராமன்   இவ்வாறு   கூறிய)   அப்போது,   இலக்குவன்  (இராமனை
நோக்கி)  ஐயனை!   பரதனைப்   போரில்   கட்டுமாறு;   எவ்விடற்கு
உரியான்  போன  இந்திரசித்தே  அன்று
 -  நாகபாசம்  முதலான
படையினை ஏவுவதற்கு உரியவனாய்ப் போன இந்திரசித்தே