அல்ல; மும்மை உலகமும் தெவ் இடத்து அமையின் தீந்து அறாவோ - மூன்று உலகமும் சேர்ந்து பகைப்புலத்து நிற்குமாயினும் அழிந்து ஒழியாவோ;வெவ் இடர்க் கடலின் வைகல்; கேள் என, விளம்பலுற்றான் - கொடிய துன்பக்கடலில் நீதங்கவேண்டா; எனக்கூறத் தொடங்கினான். |
(81) |
8921. | ‘தீக் கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட, வீக் கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக் கூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல், போய்க் கண்டு கோடி அன்றே?’ என்றனன் புழுங்குகின்றான். |
தீக்கொண்ட வஞ்சன் வீச திசை முகன் பாசம் தீண்ட - தீமையை இயல்பாகக் கொண்ட வஞ்சனாகிய இந்திரசித்து வீசியதால் பிரமன் அளித்த நாகபாசம் வந்து தீண்டிய உடனே; வீக்கொண்டு வீழ, யானோ பரதனும் - இறந்து வீழ யானோ பரதனும்? (யான் அல்லன் அப்பரதன்); அன்னான் குத்துண்டு வெய்ய கூற்றைக் கூய்க் கொண்டு - அவ் இந்திரசித்து (பரதனால்) குத்துப்பட்டு கொடிய யமனைக் கூவி அழைத்தவாறு; குலத்தொடு நிலத்தன் ஆதல் - தன் இனத்தவரோடு நிலத்தில் வீழ்வதனை; போய்க்கண்டு கோடி அன்றே? என்றனன், புழுங்குகின்றான் - நீயே போய் நேரே கண்டு கொள்வாய் அல்லவோ? என்று கூறினான் மனம்புழுங்குகின்றவனாகிய இலக்குவன். |
இராமனைத் தேற்றக்கூறினான் என்பதிலும் பரதன் தன்னினும் பேராற்றல் உடையவன் என்பதை உணர்ந்தே கூறினான் என்பதே பொருந்தும். “வள்ளலையே அனையான் அல்லவோ (கம்ப.657) பரதன். |
(82) |
இராம - இலக்குவர் அயோத்தி செல்லத் தன் தோள்மேல் ஏறுமாறு அனுமன் வேண்டுதல் |
8922. | அக் கணத்து அனுமன் நின்றான், ‘ஐய! என் தோளின் ஆதல், கைத் துணைத் தலத்தே ஆதல், ஏறுதிர்; காற்றும் தாழ, |