பக்கம் எண் :

762யுத்த காண்டம் 

     

இக் கணத்து அயோத்தி மூதூர் எய்துவென்; இடம் உண்டு
                                      என்னின்,
திக்குஅனைத்தினிலும் செல்வென்; யானே போய்ப்
                              பகையும் தீர்வென்;
 

அக்கணத்து  நின்றான் அனுமன் ‘ஐய! என் தோளின் ஆதல் -
(இவ்வாறு  இலக்குவன்  கூற)   அப்பொழுது அங்கு  நின்றிருந்தவனான
அனுமன்   (இராமனை   நோக்கி)    ‘ஐயனே!  என்   தோள்களிலோ;
கைத்துணைத்  தலத்தே  ஆதல்  ஏறுதிர்  -  அல்லது    இருகைத்
தலங்களிலோ   ஏறிக்   கொள்ளுங்கள்;  காற்றும்  தாழ  இக்கணத்து
அயோத்தி மூதூர்  எய்துவென்
 -  காற்றும் விரைவில் பின்னிடுமாறு
இந்தக்   கணத்தில்    அயோத்தி   என்னும்   பழமையான    ஊரை
அடைவேன்;  இடம்   உண்டு  என்னின்   திக்கு  அனைத்திலும்
செல்வென்
- இடம்  வாய்க்குமாயின்  திசை எல்லாவற்றிலும் செல்வேன்
யானே போய்ப்பகையும் தீர்வென் -  (நீங்கள் விரும்பினால்)  யானே
தனித்துச் சென்று பகைவனையும் ஒழி்ப்பேன்.
 

                                                 (83)
 

8923.
 

‘கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான்,
சொல்லவும் சொல்லி நின்றேன்; கொன்றபின், துன்பம்
                                         என்னை

வெல்லவும்,  தரையின்வீழ்வுற்று  உணர்ந்திலென்;
                               விரைந்து போனான்;
இல்லை என்று உளனேல், தீயோன் பிழைக்குமோ?
                                இழுக்கம் உற்றான்!
 

கொல்லவந்தானை விலக்கிக்  கொள்வான்  நீதி  கூறினென் -
சீதையைக்  கொல்லவந்த  இந்திரசித்தை  அச்செயலினின்றும்  விலக்கிச்
சீதையை  உய்யக்  கொள்வதற்காக  நன்னெறிகளை  எடுத்துக்கூறினேன்;
சொல்லவும்  சொல்லி  நின்றேன் கொன்றபின்  துன்பம் என்னை
வெல்லவும்
 -  இதமான  சொற்களைப்  பேசி நின்றேன்   (அவற்றைக்
கேளாமல்  அவன்  பிராட்டியைக்)    கொன்ற   பிறகு (பற்றிய) துன்பம்
என்னை வெற்றி  கொண்டதால்; தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென்
விரைந்து போனான்
- தரையில் வீழ்ந்து உணர்விழந்தேன்  (அப்போது
அவ்விந்திரசித்து) விரைந்து போய்விட்டான்; இல்லை என்று உளனேல்
தீயோன் பீழைக்குமோ?