பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 763

இழுக்கம்   உற்றான்   -   அங்ஙனமின்றி  இருந்திருப்பானேயானால்
தீயனாகிய அவன் உயிர் வாழ்ந்திருப்பானோ? தவறு செய்தான்?
 

                                                 (84)
 

8924.

‘மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக,
நினைப்பின் முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து
                                        நிற்பென்;
இனி, சில தாழ்ப்பது என்னே? ஏறுதிர், இரண்டு தோளும்,
புனத் துழாய் மாலை மார்பீர்! புட்பகம் போதல் முன்னம்.’
 

மனத்தின்  முன்  செல்லும்  மானம் போனது  வழியது ஆக -
மனத்தின்  முன்  விரைவாகச்  செல்லத்தக்க புட்பக விமானம்   போன
வழியாகவே;  நினைப்பின  முன்  அயோத்தி  எய்தி,  வரு  நெறி
பார்த்து   நிற்பென்
-  அவ்விமானம்  பிற்படும்படி நம் நினைப்பினும்
முன்னதாக அயோத்தியை அடைந்து அவ்விமானம்   வரும்    வழியை
எதிர்பார்த்துக்கொண்டு  நிற்பேன்; புனத்துழாய் மாலை மார்பீர் இனிச்
சிலதாழ்ப்பது   என்னே?
  -   துளபமாலையை  அணிந்தமார்பினை
உடையவர்களே!  இனிச்சில  கணங்கள்  தாமும்    தாழ்ப்பது  எதற்கு?
புட்பகம் போதல்  முன்னம்    இரண்டு    தோளும்   ஏறுதிர் -
புட்பகவிமானம்  போவதற்குமுன்பே அயோத்தியை  அடையுமாறு  என்
இரண்டு தோள்களிலும் ஏறுங்கள்; (என அனுமன் கூறினான்)
 

                                                 (85)
 

                                  வீடணன், ‘இது மாயம்’ எனல்
 

8925.

‘ஏறுதும்’ என்னா, வீரர் எழுதலும், இறைஞ்சி, ‘ஈண்டுக்
கூறுவது உளது: துன்பம் கோளுறக் குலுங்கி, உள்ளம்
தேறுவது அரிது; செய்கை மயங்கினென்; திகைத்து
                                    நின்றேன்;
ஆறினென்; அதனை, ஐய! மாயம் என்று
                            அயிர்க்கின்றேனால்.
 

‘ஏறுதும்’  என்னா  வீரர்  எழுதலும்  இறைஞ்சி   -  (அனுமன்
தோள்மேல்) ஏறுவோம் என்று இராமலக்குவர் எழுகையில்