(வீடணன் இராமணை) வணங்கி; ஈண்டுக் கூறுவது உளது துன்பம் கோளுற உள்ளம் குலுங்கி - இப்போது யான் சொல்ல வேண்டிய செய்தி உளது, துன்பம் என்னை முழுமையாகக் கொண்டதால் உள்ளம் நடுங்கி; தேறுவது அரிது; செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் - தெளிவு பெறுவது அரிதாய்விட்டமையால், செயல் மயங்கியவனாய்த் திகைத்து நின்றேன்; ஆறினென்; அதனை ஐயா! மாயம் என்று அயிர்க்கின்றேனால் - இப்போது அத்துன்பம் ஆறினென்; (தெளிவுற்றேன்) ஐயனே! (இந்திரசித்து) சீதையைக் கொன்ற செயல் மாயம் என்று ஐயறுகின்றேன். |
(86) |
8926. | ‘பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது, முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே? அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம், சிறிது போழ்தின். |
பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது - பத்தினியாகிய சீதையைப் பாதகனாகிய இந்திரசித்து தீண்டிக்கொன்றிருப்பானாயின் அச் செயல் நடந்த போதே; முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே?- மூன்று வகையான உலகங்களும் வெந்து சாம்பலாய்ப் போயிருக்கு மன்றோ? (அங்ஙனம் நடவாமையின் அது மாயச்செயலே); அத்திறம் ஆனதேனும் அயோத்தி மேல் போன வார்த்தை - அந்நிகழ்ச்சி உண்மையாக நடந்திருந்ததாயினும் இந்திரசித்து அயோத்தி மேல் போனான் என்றவார்த்தை சித்திரம் இதனையெல்லாம் சிறிது போழ்தின்தெரியலாம் - அதிசயமானது இதையெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். |
(87) |
வீடணன் வண்டு உருக்கொண்டு சென்று சீதையைக் காணுதல் |
8927. | ‘இமை இடையாக யான் சென்று, ஏந்திழை இருக்கை எய்தி, அமைவுற நோக்கி, உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னைச் |