| சமைவது செய்வது’ என்று வீடணன் விளம்ப, ‘தக்கது; அமைவது’ என்று இராமன் சொன்னான்; அந்தரத்து அவனும் சென்றான். | இமை இடையாக யான் சென்று - இமைப்பொழுதுக்குள்ளாக யான் போய்; ஏந்திழை இருக்கை எய்தி - சீதையின் இருப்பிடத்தை அடைந்து; அமைவுற நோக்கி - பொருத்த முறப்பார்த்து; உற்றது அறிந்து வந்து அறைந்து பின்னர்ச் - நிகழ்ந்ததை அறிந்து வந்து (யான்) சொன்ன பின்பு; ‘சமைவது செய்வது’ என்று வீடணன் விளம்ப - ‘பொருந்தியது செய்யத் தக்கது’ என்று வீடணன் சொல்ல; இராமன், ‘தக்கது அமைவது’ என்று சொன்னான் - இராமன் இது செய்யத் தக்கது! பொருத்தமானது! என்று உடன்பட்டுச் சொன்னான்; அவனும் அந்தரத்து சென்றான் - வீடணனும் விண்வழியே (அசோக வனத்திற்குப்) போனான். | (88) | 8928. | வண்டினது உருவம் கொண்டான், மானவன் மனத்தின் போனான்; தண்டலை இருக்கைதன்னைப் பொருக்கெனச் சார்ந்து, தானே கண்டனன் என்ப மன்னோ, கண்களால்-கருத்தில் ‘ஆவி உண்டு, இலை’ என்ன நின்ற, ஓவியம் ஒக்கின்றாளை. | வண்டினது உருவம் கொண்டான் - வண்டினது உருவத்தைக் கொண்டவனாய்; மானவன் மனத்தின் போனான் - இராமனது மனத்தைப் போல் விரைந்து சென்று; தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்து - அசோகவனத்திலுள்ள சீதையின் இருப்பிடத்தை விரைந்து அடைந்து; ‘ஆவி உண்டு, இலை’ என்ன நின்ற - உயிர் உண்டு, இல்லை என ஐயுற்றுச் சொல்லுமாறு இருக்கின்ற; ஓவியம் ஓக்கின்றாளை - ஓவியம் போன்றவளாகிய சீதையை; தானே கண்களால் கருத்தில் கண்டனன் - (வீடணன்) தானே தன் கண்களினால் கருத்தோடு கண்டான். |
|
|
|