பக்கம் எண் :

766யுத்த காண்டம் 

என்ப,  மன் ஓ - ஓசை.  பிறர்  அறியாமலிருக்க வீடணன்  வண்டின்
உருவத்தை எடுத்தான். மானவன் -  பெருமை உடையவன் -   இராமன்;
தண்டலை  -  குளிர்ந்த இடம். பொருக்கென - இடைச்சொல்,  விரைவு
உணர்த்த வந்தது.
 

                                                 (89)
 

                    வீடணன், இந்திரசித்தன் சூழ்ச்சியை உணர்தல்
 

8929.
 

‘தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு’ என்று
                             உணர்ந்த சிந்தை

பேர்ப்பன செஞ் சொலாள், அத் திரிசடை பேசப்
                                  பேர்ந்தாள்,
கார்ப் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக, ஆர் உயிர்
                                ஆற்றினாளை,
 

யான் துன்பம் தீர்ப்பது என் உயிரொடு என்று - ‘யான் துன்பம்
தீர்வது  என்  உயிரோடுதான்’ என்று;  உணர்ந்த  சிந்தை பேர்ப்பன
செஞ்சொலாள்
  -  எண்ணி   (இறக்கத்துணிந்த)  மனத்தை  மாற்றும்
ஆற்றலுடைய செம்மையான சொற்களை உடையவளான;   அத்திரிசடை
பேசப்  பேர்ந்தாள்
 -  அந்தத் திரிசடை பேசியதால் துன்பம் நீங்கப்
பெற்றவளாய்; கார்ப்பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
- கரிய   பெரிய    மேகம்    வந்து    ஊழி    இறுதியில்   கலந்து
ஆரவாரித்தாற்போன்ற;  ஆர்ப்பொலி  அமுதம்  ஆக  ஆர் உயிர்
ஆற்றினாளை
 - (வானரங்களின்) ஆரவார ஒலியே தனக்கு  அமிழ்தம்
போன்றதாகத்   தன்    அரிய   உயிரைச்   சுமந்திருந்த    சீதையை.
‘கண்டனன்’ என்று முன்பாட்டில் முடிந்தது.
 

                                                 (90)
 

8930.

வஞ்சனை என்பது உன்னி, வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி, உள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான்,

‘வெஞ் சிலை மைந்தன் போனான், நிகும்பலை
                            வேள்வியான்’ என்று,

எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து, எழுந்து, ஏகக்
                                    கண்டான்.

 

வஞ்சனை   என்பது   உன்னி  -   (சீதையைக்  கொன்றசெயல்)
மாயம் என்பதை நினைத்து; வான் உயர் உவகை வைகும்