பக்கம் எண் :

768யுத்த காண்டம் 

    வீடணன் வந்து, இராமனை வணங்கி நிலைமையை எடுத்துரைத்தல்
 

8932.
 

‘இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனென், என் கண் ஆர;
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ? அரக்கன்
                                          நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற முடிக்க
                                      மூண்டான்.’
 

தேவி இருந்தனள் யானே என் கண் ஆர எதிர்ந்தனென்-“தேவி
இருந்தனள்   யானே   என்   கண்ணாரக்   கண்டேன்;   அருந்ததிக்
கற்பினாளுக்கு  அழிவு   உண்டோ
- அருந்ததி  அனைய கற்பினை
உடைய   சீதைக்கு    அழிவும்   வருவதுண்டோ?  அரக்கன் நம்மை
வருந்திட மாயம்  செய்து
- இந்திரசித்து  நம்மை  வருந்தும்  படியான
மாயங்களைச்  செய்து  (போக்குக்காட்டிவிட்டு);  நிகும்பலை   மருங்கு
புக்கான்
 -  நிகும்பலை என்னும் கோயிலில் புகுந்து; முருங்கு  அழல்
வேள்வி முற்றி  முதல்  அற முடிக்க மூண்டான்
- (எல்லாவற்றையும்
அழிக்க  வல்ல)   தீயில்  செய்யப்படும்  வேள்வியைச்  செய்து முடித்து
நம்மை அடியோடு அறும்படி அழிக்க மூண்டுளான்”.
 

                                                 (93)
 

8933.

என்றலும், ‘உலகம் ஏழும், ஏழு மாத் தீவும், எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும், ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை
அன்று’ என, ‘ஆகும்’ என்ன, அமரரும் அயிர்க்க, ஆர்த்து,
குன்றுஇனம் இடியத் துள்ளி, ஆடின-குரக்கின் கூட்டம்.
 

என்றலும்,  ‘உலகம்  ஏழும்  ஏழுமாத்தீவும் -  என்று  வீடணன்
கூறியவுடன்  ‘ஏழுஉலகங்களும்,  இவ்வுலகத்து   ஏழுபெரிய  தீவுகளும்;
‘எல்லை ஒன்றிய  கடல்கள்  ஏழும்  -  எல்லை  பொருந்திய  ஏழு
கடல்களும்; ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை அன்று’ என ‘ஆகும்’
என்ன
- ‘ஒரு  சேர  எழுந்து ஆரவாரிக்கும் ஓசை இதுவன்று’ எனவும்,
‘அவ்வோசையே   ஆகும்’ எனவும், அமரரும்   அயிர்க்க  குரக்கின்
கூட்டம்
 -  தேவர்களும்  ஐயுறுமாறு குரங்கின் கூட்டம்  ஆரவாரித்து;
குன்று  இனம்  இடியத்  துள்ளி  ஆடின  -  மலைகளும் இடியுமாறு
துள்ளிக்குதித்து ஆடின.
 

                                                 (94)