பக்கம் எண் :

770யுத்த காண்டம் 

(துணையாக)    உள்ளது;   (அத்துடன்)   வேதமும்   (துணையென)
உள்ளது.
 

                                                   (1)
 

8935.

என்றலும், இறைஞ்சி, ‘யாகம் முற்றுமேல், யாரும் வெல்லார்
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென்’
                                       என்றான்;
‘நன்று அது; புரிதிர்!’ என்னா, நாயகன் நவில்வதானான்:
 

என்றலும் இறைஞ்சி - என்று (இராமன்) கூறிய அளவில் (வீடணன்
இராமனை) வணங்கி;  யாகம்  முற்றுமேல்    யாரும்  வெல்லார் -
(இந்திரசித்து  செய்யத் தொடங்கிய) வேள்வி  நிறைவுறுமானால்  யாரும்
அவனை  வெல்ல வல்லவராகார்;  வென்றியும்  அரக்கர்  மேற்றே -
வெற்றியும்  அரக்கர்  பக்கத்தேயாகும்;  விடை அருள் இளவலோடும்
சென்று  அவன்  ஆவி  உண்டு
 -  ஆகவே  விடை கொடுப்பாயாக
இலக்குவனோடும்  சென்று  அவனது  உயிரை  உண்டு;   வேள்வியும்
சிதைப்பன்  என்றான்
  -   அவன்   இயற்றும்   வேள்வியினையும்
அழிப்பேன் என்று கூறினான்; நாயகன், ‘நன்று அது புரிதிர்’ என்னா
நவில்வதானான்
  -   தலைவனாகிய  இராமன்   ‘நல்லது!  அதனைச்
செய்யுங்கள்! எனச் சொல்லி (மேலும் சிலவற்றைக்) கூறுவானாயினன்.
 

என்றான்   என்னும்  பயனிலைக்குரிய  வீடணன் என்னும் எழுவாய்
விருவித்துரைக்கப்பட்டது.  அவன்  என்றது  இந்திர  சித்தனை.  ‘நன்று
அது  புரிதிர்’  என்பது   இராமனின்  இசைவு  மொழி.   வீடணனுடன்
இலக்குவன்   முதலியோரையும்  சேர்த்துக்   கூறுவதால் ‘புரிதிர்’ எனப்
பலர்பாலாற் கூறினான். நாயகன் - தலைவன் - இராமன்.
 

                                                  (2)
 

          இராமன் இலக்குவனுக்கு அம்பு விடுவது பற்றி அறிவுறுத்தல்
 

8936.

தம்பியைத் தழுவி, ஐய! தாமரைத் தவிசின் மேலான்
வெம் படை தொடுக்கும்ஆயின், விலக்குமது அன்றி, வீர!