பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 771

அம்பு நீ துரப்பாய்அல்லை; அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி’
                                   என்றான்.
 

தம்பியைத்  தழுவி - (இராமன்) தன்  தம்பியாகிய  இலக்குவனைத்
தழுவிக்கொண்டு;   ‘ஐய!  தாமரைத்  தவிசின்  மேலான் - ‘ஐயனே!
(இந்திரசித்து)      தாமரையை      இருக்கையாகக்      கொண்டுள்ள
பிரமதேவனுடைய;   வெம்படை  தொடுக்கும்  ஆயின்  -  வெம்மை
பொருந்திய   அம்பினை  (உன்மேல்)  தொடுத்து  விடுவானாயின்; வீர!
விலக்குமது   ன்றி  அம்பு  நீ  துரப்பாய்  அல்லை
 -   வீரனே!
அப்பிரமாஸ்திரத்தை   விலக்குவதற்காகவன்றி   மற்று நின்  அம்பினை
(பிரமன் கணையை) (அவன்மேல்)  செலுத்தா  திருப்பாயாக;  அனையது
துரந்த காலை
- அங்ஙனமின்றி நினது  பிரமன் கணையை அவன் மீது
விடுப்பாயின்; உம்பரும்  உலகும்  எல்லாம்  விளியும்; அஃது ஒழிதி’
என்றான்  -  (அவன்  மட்டுமின்றி)   வானுலகும்,  இவ்வுலகும்  ஆகிய
எல்லாம்     அழிந்தொழியும்.     எனவே     அதனை    அங்ஙனம்
செலுத்துதலைத் தவிர்ப்பாயாக என்று கூறினான்.
 

                                                  (3)
 

8937.

‘முக்கணான் படையும், ஆழி  முதலவன் படையும், முன்
                                        நின்று
ஒக்கவே விடுமே; விட்டால் அவற்றையும் அவற்றால்
                                         ஓயத்
தக்கவாறு இயற்றி, மற்று, உன் சிலை வலித்
                                  தருக்கினாலே,
புக்கவன் ஆவி கொண்டு, போதுதி-புகழின் மிக்கோய்!
 

புகழின்   மிக்கோய்  -   மேம்பட்ட   புகழினை   உடையவனே!
முக்கணான்  படையும்  ஆழி   முதலவன்   படையும்  -  மூன்று
கண்களையுடைய  சிவபெருமானின்  பாசுபதாத்திரம்   மற்றும்   சக்கரப்
படையை   உடைய   திருமாலின்    நாராயணாத்திரம்  ஆகியவற்றை;
முன்னின்று ஒக்கவே விடுமே விட்டால்- (அவ்விந்திரசித்து) முற்பட்டு
நின்று  ஒருசேர  (உன்மேல்)  ஏவுதல்  கூடும்,   அங்ஙனம்  ஏவினால்;
அவற்றையும்    அவற்றால்    ஓயத்    தக்கவாறு    இயற்றி  -
அப்படைக்கலங்களையும்   அப்படைகளினாலேயே  ஆற்றல்  கெடுமாறு
செய்து; மற்று உன் சிலைவலித் தருக்கினாலே -