உன்னுடைய வில் வலிமையினாலே; புக்கவன் ஆவிகொண்டு போதுதி - (நின்மேற் போர் செய்யப்) புகுந்தவனது ஆவியினைக் கவர்ந்து கொண்டு மீள்வாயாக; | (4) | 8938. | ‘வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து, மாள, கல்லுதி, தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு; பல் பெரும் போரும் செய்து வருந்தி; அற்றம் பார்த்து கொல்லுதி, அமரர்தங்கள் கூற்றினை-கூற்றம் ஒப்பாய்! | கூற்றம் ஒப்பாய் - (பகைவர்க்கு) இயமனைப் போன்றவனே! தருமமென்னும் கண் அகன் கருத்தைக் கண்டு - இவ்விடத்திற்கு இது தருமம் என்னும் விரிவான அறக்கோட்பாடுகளை (நுட்பமாகக்) கண்டு (அதன் வழி நின்று); வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து - (இந்திரசித்து தான் பயின்று) கைவந்த மாயச் செயல்களாக வகைபெற இயற்று முன்னரே (குறிப்பினால்) அறிந்து; மாள, கல்லுதி - (அவையெல்லாம்) அறவே கெட்டொழியுமாறு (வேருடன்) பெயர்த்தெறிவாயாக; பல்பெரும் போரும் செய்து - பல்வகைப்பட்ட பெரிய போர்த் தொழில்களையும் செய்து; வருந்தின அற்றம் பார்த்து- தளர்ச்சியுற்ற சமயம் பார்த்து; அமரர் தங்கள் கூற்றினைக் கொல்லுதி - தேவர்களுக்குக் கூற்றுவனாக விளங்குகின்ற அவ்விந்திரசித்தனைக் கொல்வாயாக; | போரும் செய்து வருந்தலை என்பதற்குப் பதிலாக வருந்தின எனப் பாடம் கொள்ளப்படுகின்றது. | (5) | 8939. | ‘பதைத்து அவன், வெம்மை ஆடி, பல் பெரும் பகழி மாரி விதைத்தவன் விதையாநின்று விலக்கினை, மெலிவு மிக்கால், உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக் கழிய ஓட்டி, வதைத் தொழில் புரிதி-சாப நூல் நெறி மறப்பிலாதாய்! |
|
|
|