கடுப்பினும் அளவு இலாத கதியினும் - தக்க விரைவுடனும் அளவு இல்லாத கதியினோடும்; கணைகள் காற்றின் விடுப்பன் அவற்றை நோக்கி விடுதியால் - அம்புகள் காற்றைப் போன்று விடுப்பன வற்றை (கூர்ந்து) நோக்கி (அவன்மேல்) செலுத்துவாயாக. |
(7) |
திருமாலின் வில் முதலியன இராமன் கொடுத்தல் |
8941. | என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி, ஏற்ற முன்பனை நோக்கி, ‘ஐய! மூவகை உலகும் தான் ஆய் தன் பெருத் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் வன் பெருஞ் சிலை ஈது ஆகும்; வாங்குதி; வலமும் கொள்வாய்! |
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி - என மேற்கூறியனவாகிய உபாயங்கள் யாவற்றையும் (இலக்குவனுக்கு) எடுத்துக் கூறி; ஏற்ற முன்பனை நோக்கி - (தான் கூறியவற்றை விரும்பி) ஏற்றுக் கொண்ட வலிமிக்கோனாகிய இலக்குவனை (மீண்டும்) நோக்கி; ஐய! மூவகை உலகும் தான் ஆய் - ஐயனே! மூவகை உலகங்களும் தானே ஆகி; தன் பெருந்தன்மை தானும் அறிகிலா ஒருவன் - தனது பெருமையினைத் தானும் அறியாத ஒப்பற்ற தலைவனாகிய திருமால்;தாங்கும் வன்பெரும் சிலை ஈது ஆகும் - (தன் கையில்) ஏந்திய பெரிய வில் இதுவாகும்; வாங்குதி வலமும் கொள்வாய் - இதனை நின்கையில் வாங்குவாயாக (இதனால்) வெற்றியும் கொள்வாயாக; |
இறைவன் தன்னினும் பிறிதுபொருள் தனக்கு ஒப்பு நோக்கவின்றி நின்ற ஒருமையன் ஆகலின், ‘தன் பெருந்தன்மை தானும் அறிகிலா ஒருவன்’ என்றார். “தன்பெருமை தானறியாத் தன்மையன் சாழலோ” (திருவாசகம் திருச்சாழல் - 19) என்பது ஒப்பு நோக்கத்தக்கது. |
(8) |
8942. | ‘இச் சிலை இயற்கை மேல்நாள்; தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் அச்செனக் கேட்டாய் அன்றே? ஆயிரம் மௌலி அண்ணல் |