| நிகும்பலை யாகப் படலம் | 775 |
| மெய்ச் சிலை; விரிஞ்சன் தானே வேள்வியின் வேட்டுப் பெற்ற கைச் சிலை கோடி’ என்று கொடுத்தனன், கவசத்தோடும். | இச்சிலை இயற்கை மேல் நாள் - இந்த வில்லினுடைய இயல்பைக் குறித்து முன்னொரு நாள்;தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் - தமிழ் முனிவராகிய அகத்தியர் கூறியவற்றை எல்லாம்;அச்செனக் கேட்டாய் அன்றே? - உறுதியுடைய சொற்களாக (நின் உள்ளத்தில்) பதியும்படியாகக் கேட்டாயல்லவா? ஆயிரம் மௌவி அண்ணல் மெய்ச்சிலை - ஆயிரம் திருமுடிகளை உடைய திருமால் (தன்) திருமேனியில் கொண்ட வில்லாகிய இது; விரிஞ்சன் தானே வேள்வியில் வேட்டுப்பெற்ற கைச்சிலை - பிரமதேவனே (தான் செய்த) வேள்வியில் விரும்பிப் பெற்ற கைவில்லாகும்; கோடி என்று கவசத்தோடும் கொடுத்தனன் - (இதனை) ஏற்றுக் கொள்வாயாக என்று (அதன் பெருமையைக்) கூறி (தனது) போர்க் கவசத்தோடும் (இலக்குவனுக்கும்) கொடுத்தான் (இராமன்) | சிலை - வில். தமிழ் முனி - அகத்தியர். சிவபெருமானிடம் தமிழ் கற்று ‘என்றுமுள அத்தென்தமிழை இயம்பி இசை கொண்டதால்’ இப்பெயர் பெற்றார். அச்சு - வலிமை, உறுதி. “ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்” (தேவா -4-4-8) என்றவாறு எண்ணிலா முடிகளை உடைய இறைவனை “ஆயிரமௌலி அண்ணல்” எனக் குறித்தார். விரிஞ்சன் - பிரமன். திருமாலிடமிருந்த வில்லினை பிரமன் வேள்வி செய்து வேண்டிப்பெற்று அகத்தியரிடம் கொடுக்க, அவர் அதனை இராமனுக்கு அளிக்க, அதனை இப்பொழுது இலக்குவனுக்கு, கவசத்தோடும் கொடுத்தனன் என்பது வில் வரலாறு. | (9) | 8943. | ஆணி, இவ் உலகுக்கு, ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி, தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன்; தழுவலோடும், சேண் உயர் விசும்பில் தேவர், ‘தீர்ந்தது எம் சிறுமை’ என்றார். |
|
|
|