பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 777

பெருமான்;  திரிபுரம் தீக்கச் சீறிப் -  முப்புரங்களையும் சுட்டெரிக்கச்
சினந்து;பொங்கினன்  என்ன,  தோன்றிப் பொலிந்தனன் - பொங்கி
எழுந்தான் என்னும் தோற்றமுடையவனாய் விளங்கினான்
 

                                                  (11)
 

8945.
 

‘மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்.
வீர! நீ சேறி’ என்று விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம், அகத்தினும் புறத்தும் ஆக,
சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன்.
 

மாருதி  முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் -   அனுமனை
முதலாகக்  கொண்ட  வானரப் படைத்தலைவர்களோடும்; வீர! நீ சேறி
என்று விடை  கொடுத்தருளும்  வேலை
 -  வீரனே! நீ போருக்குச்
செல்வாயாக   என்று  (இராமன்)  விடை  கொடுத்தருளிய    பொழுது;
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக - பெரியோனாகிய
இராமனின்   செந்தாமரை  மலர்  போன்ற   திருவடிகளை   அகத்தும்
புறத்தும் அமைய;   சீரிய   சென்னி  சேர்த்து  தருமச்  செல்வன்
சென்றனன்  
-  சிறப்புடைய  தன்   தலையிற்  பொருந்த   வைத்துத்
தருமத்திற்குச் செல்வம் போன்றவனாகிய  இலக்குவன்  (நிகும்பலைக்குச்)
சென்றான்.
 

ஆரியன்     -  பெரியோன்.   கமல  பாதம்  -  கமலம்  போன்ற
திருவடிகள்.  அகத்திலும்  -   நெஞ்சகத்திலும்,  புறத்திலும் -  புறத்தில்
புலப்படும்படியாக  நாவால்  வாழ்த்தியும் -  என்றவாறு.  திருவடிகளைச்
சூடும்    சீர்மையால்  சீரிய   சென்னி   என்றார்.  சென்னி  -  தலை.
தருமத்தின்   செல்வம்   போன்றவனாகலின்  இலக்குவனைத்   தருமச்
செல்வன் என்றார்.
 

                                                 (12)
 

8946.

பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன், பொருமி,
                                       கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று, நெஞ்சு அழிவானை, தம்பி
வலம் கொண்டு, வயிர வல் வில் இடம் கொண்டு,
                                   வஞ்சன்மேலே,

சலம் கொண்டு, கடிது சென்றான், ‘தலை  கொண்டு
                                வருவென்’ என்றே.