பொலங்கொண்டல் அனைய மேனிப்புரவலன் - அழகிய மேகத்தைப் போன்ற மேனியை உடைய இராமன்; பொருமி, கண்ணீர் நிலம் கொண்டு படர நின்று - (உள்ளம்) விம்மிக் கண்ணின் நீர் ஒழுகி நிலத்திற் படர்ந்து செல்லும்படி நின்று; நெஞ்சு அழிவானை, தம்பி வலம் கொண்டு - (பிரிவால்) மனம் கலங்குகின்றவனைத் தம்பி (இலக்குவன்) வலம் வந்து வணங்கி; வயிரவல்வில் இடம் கொண்டு - (அவன் தந்த) திண்மையான வலிய வில்லினைத் தன் இடக்கையில் கொண்டு; வஞ்சன் மேலே சலம் கொண்டு - வஞ்சனைத் திறமுடையவனாகிய இந்திரசித்தன் மேல் சினங்கொண்டு; தலை கொண்டு வருவன் என்றே கடிது சென்றான் - அவனது தலையைக் கொண்டுவருவேன் என்று சொல்லி விரைந்து சென்றான். |
(13) |
8947. | தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்வான், ஊன் பிரிகின்றிலாத உயிர் என, மறைதலோடும் வான் பெரு வேள்வி காக்க; வளர்கின்ற பருவ நாளில் தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். |
தான் பிரிகின்றிலாத தம்பி வெங்கடுப்பின் செல்வான் - தன்னாற் பிரிந்துறைதல் இயலாத (தன்) தம்பி இலக்குவன் மிக்க விரைவுடன் செல்பவன்; ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் - உடம்பினை விட்டுப் பிரிதலாற்றாத உயிரைப் போன்று மறைந்த அளவில்; தான் வளர்கின்ற பருவநாளில் - இராமனாகிய தான் வளர்ந்து வருகின்ற இளம் பருவத்திலே; வான் பெருவேள்வி காக்க - (விசுவாமித்திரனது) உயர்ந்த பெரிய வேள்வியைக் காத்தற்பொருட்டு; பிரிந்து ஏகக்கண்ட தயரதன் தன்னை ஒத்தான் - பிரிந்து செல்லுதலைக் கண்ணுற்ற தந்தை தயரதனை ஒத்துத் தோன்றினான். |
(14) |
நிகும்பலையில் வானரர் அரக்கர் சேனைனயக் காணுதல் |
கலி விருத்தம் |
8948. | சேனாபதியே முதல் சேவகர்தாம் ஆனார், நிமிர் கொள்ளி கொள் அங்கையினார், |