பக்கம் எண் :

780யுத்த காண்டம் 

     

ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக் கடல் நின்றது ஓர் பான்மையதை.
 

தீவினையோன்     ஓமத்து  அனல்  -  கொடுவினையாளனாகிய
இந்திரசித்தனுடைய வேள்வித்தீயினை; நேமிப்பெயர் யூகம் நிரைத்து -
சக்கர   வியூகம்   என்னும்   பெயருடைய   அணி  பெற    வகுத்து;
நெடுஞ்சேமத்து  நின்றது  -  (சூழ்ந்து)  நீண்ட  பாதுகாப்புடையதாய்
நின்றதாகிய (அரக்கர்) சேனை; வெவ் வடவைக்கு உடனே - வெம்மை
மிக்க  வடவைத்  தீயைத்  தன்னுட்கொண்டு; பாமக்கடல் நின்றது ஓர்
பான்மையதை
 - பரவிய அக்கடல்  நின்றதோர் தன்மை உடையதனை
(வானர வீரர் கண்டார்)
 

                                                  (17)
 

8951.
 

கார் ஆயனி காய் கரி, தேர், பரிமா,
தார் ஆயிர கோடி தழீஇயதுதான்,
நீர் ஆழியொடு ஆழி நீறீஇயதுபோல்,
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை,
 

கார்  ஆயின  காய்கரி  -  கரிய  மேகத்தை   ஒத்த  வெகுளுந்
தன்மையினை   உடைய  யானை; தேர், பிரமா,  தார்ஆயிர  கோடி
தழீஇயது  தான்  
-  தேர்,  குதிரை,  காலாள்  ஆகிய ஆயிரங்கோடி
சேனைகளைத்  தன்பாற்  கொண்டதாய்;  நீர்  ஆழியோடு ஆழி நீறீ
இயது  போல்
 -  நீர்த்தன்மையதாகிய  கடலோடு (வேறொரு) கடலை
நிறுத்தியது போன்று; ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை- ஓராயிரம்
யோசனை தூரம் பரவியுள்ளதனை (வானர வீரர் கண்டார்).
 

                                                 (18)
 

8952.
 

பொன்-தேர், பரிமா, கரிமா, பொரு தார்
எற்றே? படை வீரரை எண்ணிலமால்!
உற்று ஏவிய யூகம் உலோகமுடைச்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை.
 

பொன் தேர்,பரிமா, கரிமா பொருதார் எற்றே? -பொன் மயமான
தேர்,  குதிரை,  யானையுடன்  கூடிய  பொருதல்    தொழிலை உடைய
தூசிப்படை  எவ்வளவினது?  படை  வீரரை எண்ணிலமால் - சேனை
வீரர்களை (அளவிட்டு) எண்ணுதற்கு இயலாதவரானோம்!  உற்று ஏவிய
யூகம்  உலோகமுடைச்
 -  பொருந்தி  ஏவப்பட்ட  சேனை அணிகள்
உலகங்கள் ஒரு