சேரவந்து; சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை - சுற்றினாற் போன்ற ஆயிரக்கணக்கினவாக வரிசைகள் இடையிடையே சுற்றி நிற்பதனை (வானர வீரர் கண்டார்). |
(19) |
8953. | வண்ணக் கரு மேனியின்மேல் மழை வாழ் விண்ணைத் தொடு செம் மயிர் வீசுதலால், அண்ணல் கரியான் அனலம்பு அட, வெம் பண்ணைக் கடல் போல்வது ஓர் பான்மையதை. |
வண்ணக் கருமேனியின் மேல் - (அரக்கர்களின்) கருநிறம் வாய்ந்த உடம்பின்மேல்; மழைவாழ் விண்ணைத் தொடு செம்மயிர் வீசுதலால் - மேகம் வாழ்கின்ற ஆகாயத்தைத் தொடும் அளவில் (உள்ள) செம்மயிர்கள் (ஒளியை) வீசுதலால்; அண்ணல் கரியான் அனல் அம்பு பட - கரிய திருமேனியை உடைய பெரியோனாகிய இராமனது தீக்கணை சுட்டு வெதுப்புதலால்; வெம்பண்ணைக் கடல் போல்வதோர் பான்மையதை - வெம்மையுற்ற நீர்த்திரளைக் கொண்ட (கருங்) கடலையொத்து விளங்கும் தன்மையினதாகிய (நிகும்பலை என்னும்) அதனை (வானரவீரர் கண்டார்). |
(20) |
8954. | வழங்கா நிலை நாண் ஒலி, வானில் வரும் பழங் கார்முகம் ஒத்த; பணைக் குலமும் தழங்கா, கடல் வாழ்வனபோல், தகை சால் முழங்கா, முகில் ஒத்தன, மா முரசே. |
சிலை நாண் ஒலி வழங்கா - (அரக்கர்கள் கையிற் கொண்ட) விற்கள், நாணொலியை வெளிப்படுத்தாதனவாய்; வானில் வரும் பழங்கார் முகம் ஒத்த - மேகத்தினிடத்தே தோன்றும் பழைய இந்திரவில்லை ஒத்தன; பண்ணைக் குலமும் கடல் வாழ்வனபோல் தழங்கா - (அவர்களுடைய) வாத்தியத் தொகுதிகளும் கடலில் வாழ்வனவற்றையொத்து முழங்காமலிருந்தன; தகைசால் மாமுரசே முழங்கா முகில் ஒத்தன - தகுதி வாய்ந்த பெரிய முரசங்களும் இடி முழக்கஞ் செய்யாத மேகத்தை ஒத்தன. |
(21) |
8955. | வலியான இராகவன் வாய்மொழியால் சலியாத நெடு்ங் கடல்தான் எனலாய் ஒலியாது உறு சேனையை உற்று, ஒரு நாள் மெலியாதவர் ஆர்த்தனர், விண் கிழிய. |