பக்கம் எண் :

782யுத்த காண்டம் 

ஒருநாள்   மெலியாதவர் - ஒரு காலத்தும்  தளர்ச்சியுறாதவராகிய
வானர  வீரர்கள்; வலியான இராகவன்  வாய் மொழியால் - வலிமை
மிக்கவனான  இராமனின்  ஆணையினால்; சலியாத நெடுங்கடல் தான்
எனலாய்
 -   அசையாது ஒலியடங்கிய பெரிய கடல் என்னும் படியாக;
ஒலியாது உறு சேனையை  உற்று  விண்  கிழிய  ஆர்த்தனர்  -
ஆர்ப்பரவஞ்   செய்யாது  பொருந்தி  இருந்த   அரக்கர்   சேனையை
அடைந்து வான் முகடு கிழியும் படியாகப் பேராரவாரம் செய்தனர்.
 

                                                  (22)
 

                        அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல்
 

8956.

ஆர்த்தார் எதிர், ஆர்த்த, அரக்கர் குலம்;
போர்த் தார் முரசங்கள் புடைத்த; புகத்
தூர்த்தார் இவர், கற் படை; சூல் முகிலின்
நீர்த் தாரையின், அம்பு அவர் நீட்டினரால்.
 

ஆர்த்தார் எதிர் அரக்கர் குலம்  ஆர்த்த - ஆரவாரித்தவராகிய
வானர  வீரர்கட்கு  எதிராக அரக்கர்  குலம் ஆரவாரித்தன; தார்போர்
முரசங்கள் புடைத்த
- மாலை  சூட்டப்பட்ட போர் முரசங்கள் (குணில்
கொண்டு)  முழக்கப்பட்டன; இவர், புக, கற்படை தூர்த்தார் - (வானர
வீரர்களாகிய)  இவர்கள்  (பகைவர்  சேனைமேற்)  புகுமாறு  கல்லாகிய
படைக்கலங்களை  (ச்சொரிந்து)  நிரப்பினார்கள்; அவர், சூல் முகிலின்
நீர்த்தாரையின்  அம்பு   நீட்டினரால்
 -  (அரக்கராகிய)  அவர்கள்
கருக்கொண்ட  மேகத்தினின்றும்   பொழியும்   நீர்த்தாரைகளையொப்ப
அம்புகளைச் செலுத்தினார்கள்.
 

                                                 (23)
 

8957.

மின்னும் படை வீசலின், வெம் படைமேல்
பன்னும் கவி சேனை படிந்துளதால்-
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய்.
 

துன்னும்  துறைநீர் நிறைவாவி தொடர்ந்து - (பலரும்) நெருங்கிச்
சென்று  படியும்  துறைகளை  உடைய  நீர்நிறைந்த  தடாகத்தின் மேல்;
அன்னங்கள்   படிந்தனவாம்   எனலாய்   -  அன்னப்  பறைவகள்
தொடர்ந்து படிந்தன என்னும்படி; மின்னும் படை வீசலின் வெம்படை
மேல்
- ஒளிவீசும் படைக்கலங்களை வீசலினால்