பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 783

(அவ்)     வரக்கர்களது   கொடுமைமிக்க   மிக்க  சேனையின்  மேல்;
பன்னும்   கவிசேனை   படிந்துளதால்   -   (வீரத்தாற்)   பாராட்டி
உரைக்கப்படும் வானர சேனை மேற்சென்று தாக்கியது.
 

                                                 (24)
 

 8958.

வில்லும், மழுவும், எழுவும், மிடலோர்,
பல்லும், தலையும். உடலும், படியில்
செல்லும்படி சிந்தின, சென்றனவால்-
கல்லும் மரமும் கரமும் கதுவ.
 

கல்லும்  மரமும் கரமும் கதுவ - (வானரர் வீசிய) கல்லும், மரமும்,
(அவர்தம்) கையும் பற்றித் தாக்கியதனால்; மிடலோர் வில்லும் மழுவும்
எழுவும்
 -  வலிமை வாய்ந்தவரான அரக்கருடைய  வில்லும்  மழுவும்,
எழுவும்; பல்லும்,  தலையும், உடலும் படியில் செல்லும்படி சிந்தின
சென்றனவால்
 -  பல்லும்,  தலையும்,  உடலும் பூமியிற்  செல்லும்படி
சிதைந்து சென்றன.
 

                                                 (25)
 

8959.

வாலும், தலையும், உடலும், வயிறும்,
காலும், கரமும், தரை கண்டனவால்-
கோலும், மழுவும். எழுவும், கொழுவும்,
வேலும், கணையும், வளையும் விசிற.
 

கோலும்,  மழுவும்,  எழுவும்  கொழுவும்,  வேலும்,  கணையும்
வளையும்     விசிற
    -     (அரக்கர்கள்)     தண்டங்களையும்,
மழுப்படைகளையும், எழுக்களையும் கொழுக்களையும், வேல்களையும்,
அம்புகளையும்,  வளைகளையும்  (வானரர் மேல்) எறிதலால்; வாலும்,
தலையும், உடலும், வயிறும், காலும், கரமும், தரை கண்டனவால்
-
(அவற்றின்)  வாலும்,  தலையும்,  உடலும்,  வயிறும், காலும், கையும்
(அறுபட்டு) தரையில் வீழ்ந்தன.
 

                                                 (26)
 

உடனே வேள்வியைச் சிதைக்குமாறு வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்
 

8960.

வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ
நின்று இக் கடை தாழுதல் நீதியதோ?
சென்று, இக்கடி வேள்வி சிதைத்திலையேல்,
என்று, இக் கடல் வெல்குதும் யாம்?’ எனலும்,