பக்கம் எண் :

784யுத்த காண்டம் 

வீடணன்     வென்றிச் சிலை வீரனை - வீடணன், வெற்றி மிக்க
வில்வீரனாகிய  இலக்குவனை  (நோக்கி); நீ இக்கடை நின்று தாழுதல்
நீதியதோ?
- நீ இவ்விடத்து (இந்திரசித்தன் வேள்வியைச்  சிதைக்காது)
நின்று  காலந்தாழ்த்துதல்  முறையாகுமா?  இக்கடி  வேள்வி  சென்று
சிதைத்திலையேல்
 -  இந்தக்  காவல் மிக்க வேள்வியை  மேற்சென்று
சிதைத்து   அழிக்காமல்   விடுவாயாயின்;   இக்கடல்   யாம்  என்று
வெல்லதும்?  எனலும்
 -  (அரக்கர்  சேனையாகிய)  இக்கடலை நாம்
எக்காலத்தில் வெல்ல வல்லோம்? எனக் கூறிய அளவில்.
 

                                                 (27)
 

      தேவர் முதலியோரும்  வியந்து  காண  இலக்குவன்  அரக்கர்
                                       சேனையை அழித்தல்

 

8961.

தேவாசுரரும். திசை நான்முகனும்,
மூவா முதல் ஈசனும், மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும், முதலோர்
மேவாதவர் இல்லை, விசும்பு உறைவோர்.*
 

தேவாசுரரும்   திசை நான்முகனும் - தேவர்களும்,  அசுரர்களும்
திசைக்கு  ஒருமுகமாக  நாற்றிசைகளிலும் முகமுடைய  பிரம  தேவனும்;
மூவாமுதல்  ஈசனும் - (காலக் கட்டினுள் அடங்காத) மூத்தல்  இல்லாத
ஈசனும்;   மூவுலகின்கோ   ஆகிய   கொற்றவனும்   -   மூவுலகின்
தலைவனாகிய இந்திரனும்; முதலோர், விசும்பு உறைவோர் மேவாதார்
இல்லை
 -  முதலாக வானுறையும் தேவர்களில் (அங்கு)  விரும்பிவந்து
சேராதவர் யாருமில்லை.
 

                                                 (28)
 

8962.

பல்லார் படை நின்றது; பல் அணியால்,
பல் ஆர் படை நின்றது; பல் பிறை வெண்
பல்லார் படை நின்றது; பல்லியம் உம்-
பல் ஆர் படை நின்றது-பல் படையே.*
 

பல்படையே  பல்லார் படை நின்றது - பலவகைப்பட்ட (அரக்கர்)
சேனைகளுள்  (வீரர்)  பலராற்   செலுத்தப்படும்  தேர்ப்படை  நின்றது;
பல்அணியால் பல் ஆர் படை நின்றது -பல வரிசையால் பொருந்திய
குதிரைப்  படை  நின்றது;பல்பிறை வெண் பல்லார் படை நின்றது -
பலபிறை   போலும்  வெண்மையான  (கோரைப்)   பற்களை   உடைய
அரக்கர் சேனையாகிய காலாட்