(இடையிடையே அமைந்த) தீவினைப் போன்று; கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் - கூறுபட்டு விழவும், (அரக்கர் சேனையின்) உயிரைப் போக்கினான் (இலக்குவன்) |
கடலில் திடர் என்றது, கடலின் இடையே காணப்படும் சிறிய தீவுகளை, ‘திடலிடைச் செய்த கோயில் திருவிராமேச் சுரத்தை’ (4-6153) என்பது அப்பர் தேவாரம். |
(31) |
8965. | வாமக் கரிதான் அழி வார் குழி, வன் தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் தாமத் தலை உக்க, தழங்கு எரியின் ஓமத்தை நிகர்த்த; உலப்பு இலவால். |
வாமக் கரிதான் அழிவார் குழி - அழகிய யானையின் கால்களால் மிதிக்கப்பட்டுச் சிதைந்த (தரையிடத்தே உண்டாகிய) நீண்ட குழியிடத்தே; வன் தீ மொய்த்த செம்மயிரின் - வலிய தீச்சுடர்க் கற்றைகள் நெருங்கினாற் போன்ற செந்நிறமயிரினைக் கொண்ட; அரக்கர்கள் தாமத் தலைஉக்க - அரக்கருடைய மாலையணிந்த தலைகள் சிதறி விழுந்தவை; தழங்கு எரியின் ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் - ஒளி விட்டொழியும் யாக குண்டத்தின் தீயை ஒப்பன எண்ணில்லாதன உளவாயின. |
(32) |
8966. | சிலையின் கணையூடு திறந்தன, திண் கொலை வெங் களி மால் கரி செம் புனல் கொண்டு, உலைவு இன்று கிடந்தன, ஒத்தனவால், மலையும் சுனையும், வயிறும் உடலும். |
திண் கொலை வெங்களி மால் கரி - திண்மையினையும் கொல்லுந் தொழிலையும், வெகுளியையும் மதச் செருக்கையும் உடைய பெரிய யானைகள்; சிலையின் கணையூடு வயிறும் உடலும் திறந்தன - (இலக்குவனது) வில்லினின்றும் வெளிப்படும் அம்புகளால் வயிற்றிலும் உடலிலும் இடையிடையே பிளக்கப்பட்டனவாய்; செம்புனல் கொண்டு உலைவு இன்று கிடந்தன - செந்நிறமான குருதிப் புனலைக் கொண்டு உயிர் போகாது கிடந்தவை; மலையும் சுனையும் ஒத்தனவால் - மலையையும் (அதன்கண் உள்ள) சுனையையும் ஒத்துத் தோன்றின. |
(33) |