காம்பு அறுபட்டு விழுந்து; அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் - அவ்வரக்கரது இரத்த வெள்ளத்துள் அழுந்துதலால்; செந்நாகம் விழுங்கிய திங்களினை ஒத்தனவால் - செந்நிறப் பாம்பினால் விழுங்கப்பட்ட சந்திரனை ஒத்தன. |
(36) |
8970. | கொடு நீள் கரி, கையொடு தாள் குறைய, படு நீள் குருதிப் படர்கின்றனவால், அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால், நெடு நீரின் இடங்கர் நிகர்த்தனவால். |
கொடுநீள் கரி, கையொடு தாள் குறைய - கொடிய யானைகள் நீண்ட துதிக்கையுடன் கால்களும் அறுபட்டமையால்; படுநீள் குருதிப் படர்கின்றனவால் - அங்கு உண்டாகிய நீண்ட குருதி வெள்ளத்தில் செல்வன்; அடுநீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் - (பகைவரை) அடுதற்குரிய ஆற்றல் மிக்க உயிர் இல்லாமையால் (அக்குருதி வெள்ளத்தில்) ஆழாதனவாயின; நெடுநீரின் இடங்கர நிகர்த்தனவால் - (அவை) கடலிடத்தே உள்ள இடங்கர் என்னும் முதலையை ஒத்துத் தோன்றின. |
(37) |
8971. | கரி உண்ட களத்திடை உற்றன, கார் நரி உண்டி உகப்பன நட்டனவால்; இரியுண்டவர் இன் இயம் இட்டிடலால், மரியுண்ட உடற் பொறை மானினவால். |
கரி உண்ட களத்திடை உற்றன கார் நரி - யானைகளைத் தன்பாற் கொண்ட போர்க்களத்தின் கண்னே புகுந்தனவாகிய கரிய நரிகள்; உண்டி உகப்பன நட்டனவால் - உணவை விரும்பின வாய்த் தங்கின; இரியுண்டவர் இன் இயம் இட்டிடலால் - நிலை கெட்டு ஓடிய அரக்கர்களின் இனிய பறைகள்; மரியுண்ட உடற் பொறை மானினவால் - (அவர்களால்) விடப்பட்டமையால் இறந்த உடற்பொறையை ஒத்தன. |
(38) |
8972. | வாயில் கனல் வெங் கடு வாளிஇனம் பாய, பருமக் குலம் வேவனவால், வேய் உற்ற நெடுங் கிரி மீ வெயில் ஆம் தீ உற்றன ஒத்த-சினக் கரியே. |