பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 79

போல;     தேர் சென்றன - (அதிகாயனுடைய) தேரைச்  சூழ்ந்து பல
தேர்கள் சென்றன, கார் நிரை சென்றன போல் - (மின்னலுடன்) கரிய
மேகக் கூட்டங்கள் சென்றன போல்; ஒளி ஓடைகளின் கார் சென்றன
-  ஒளி  பொருந்தி  முகபடாம்  அணிந்த யானைகள் சென்றன;  பாய்
பரியே  பார் சென்றில சென்றன
- பாயும் தன்மை உள்ள குதிரைகள்
பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன.

அதிகாயன்     தேரைப்  பல  தேர்கள்   சூழ்ந்து  செல்லுவதற்குச்
கதிரவனோடு  சேர்ந்து  செல்லும்  ஊர்கோள்  உவமை,  ஊர்கோள் -
இக்காலத்துக்  கோட்டை  என வழக்கு. சூரியன் கோட்டை  போட்டால்
ஓரிரு   நாளில்   மழை  பெய்யும்  என்ற   நம்பிக்கையும்   உள்ளது.
நெற்றிப்பட்டத்துடன்  யானைகள்   செல்லவதற்கு   மின்னலுடன் கரிய
மேகங்கள் செல்லவது உவமை. பார்சென்றில - பூமியில்  கால்  பதித்துச்
செல்லாமல் தாவிச் சென்றன. பாய்பரி - வினைத் தொகை.

                                                  (25)

                 கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல்

7752.மேருத்தனை வெற்புஇனம் மொய்த்து, நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடைப் புக்கனனால்.

மேருத்தனை  வெற்பு  இனம்  மொய்த்து  -  மேரு  மலையின்
அளிவுள்ள  மலைகளின்  கூட்டம் நெருங்கி; நெடும் பாரில் செலுமாறு
படப்
 -  பெரிய  நிலவுலகில் செல்லும் தன்மை  போல; படரும் தேர்
சுற்றிடவே
- செல்லுகின்ற தேர்கள் சுற்றி நிற்க; கொடு சென்று - (தன்
படைகளைச்  செலுத்திக்)  கொண்டு  சென்று;  முரண்  போர்  முற்று
களத்திடைப்  புக்கனனால்
 - (மாறுபாடு முற்றுகிற) போர்க் களத்திற்கு
(அதிகாயன்) போய்ச் சேர்ந்தான்.

மேரு  மலையைப் பிற பெரிய மலைகள் சூழ்ந்து நிற்பது அதிகாயன்
தேரைப்  பிற  தேர்கள்  சூழ்ந்து  நிற்பதற்கு உவமை. வெற்பு - மலை.
மொய்த்து - நெருங்கி,  மேருத்தனை   -   மேருவை   தன்  என்பது
சாரியை. செலுமாறுபட - செல்லும் தன்மை ஒப்ப. கொடு - இடைக்குறை,
ஆல் - அசை.

                                                  (26)

7753.கண்டான், அவ் இராமன் எனும் களி மா
உண்டாடிய வெங் களன் ஊடுருவ;