மடக்கு என்னும் சொல்லணி வந்த செய்யுள். | (41) | 8975. | அங்கம் கிழியத் துணி பட்டதனால், அங்கு அங்கு, இழிகுற்ற அமர்த் தலைவர், அம் கங்கு இழி செம்புனல் பம்ப, அலைந்து, அம் கங்கள் நிரம்பி அலம்பியதால். | அங்கு அங்கு இழிகுற்ற அமர்த் தலைவர் - அங்கங்கே தோல்வியுற்ற போர்ப்படைத்தலைவர்களுடைய; அங்கம் கிழியத் துணி பட்டதனால் - உடம்புகள் கிழிய வெட்டப்பட்டதனால்; இழிசெம்புனல் பம்பஅம் கங்குஅலைந்து - வீழ்கின்ற குருதி நீர் மேலெழ அழகிய பருந்து (அவ்வெள்ளத்தில்) அலைதலுற்று; அங்கங்கள் நிரம்பி அலம்பியதால் - தன் உடலுறுப்புக்கள் முழுவதும் நிரம்பிக் கழுவப் பெற்றது. | (42) | 8976. | வன் தானையை, வார் கணை மாரியினால், முன், தாதை, ஓர் தேர்கொடு, மொய் பல தேர்ப் பின்றா எதிர் தானவர் பேர் அணியைக் கொன்றான் என, எய்து குறைத்தனனால். | தாதை முன் ஓர் தேர்கொடு மொய் பலதேர்ப்- தன் தந்தையாகிய தயரதன் முன்பொருகால் ஒரே தேரினைக் கொண்டு (தன்னை) நெருங்கிய பல தேர்களுடன்; பின்றா எதிர் தானவர் பேர் அணியை - (போரிற்) பின்னிடாது எதிர்த்து நின்ற அசுரர் பெருஞ் சேனையை; கொன்றான் என வன்தானையை - கொன்றவனைப் போன்று (இலக்குவனும் தான் ஒருவனாகவே நின்று) வலிய அரக்கர் சேனையை; வார்கணை மாரியினால் எய்து குறைத்தனனால் - நீண்ட அம்பு மழையினால் எய்து அழித்தான். | (43) | இந்திர சித்தன் யாகம் சிதைதல் | வேறு | 8977. | மலைகளும், மழைகளும், வான மீன்களும், அலைய வெங் கால் பொர, அழிந்த ஆம் என, உலை கொள் வெங் கனல் பொதி ஓமம் உற்றலால், தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ. |
|
|
|