பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 791

அலைய வெங்கால் பொர - (யாவும் நிலை பெயர்ந்து) அலையுமாறு
(ஊழிக்காலத்துக்)    கடுங்காற்று     வீசித்தாக்குதலால்;   மலைகளும்,
மழைகளும், வான  மீன்களும்  அழிந்த  ஆம்  என
- மலைகளும்,
மேகங்களும்,  விண்மீன்களும்  அழிந்து  வீழ்ந்தன என்னும்படி; தாவுவ
சரமும்,   தலைகளும்   உடல்களும்
 -   தாவிப்   படர்வனவாகிய
அம்புகளும்  (அவற்றால்  எய்யப்பட்ட   அரக்கர்களின்)    தலைகளும்
உடல்களும்;  உலைகொள்  வெங்கனல்  பொதி ஓமம் உற்றவால்  -
உலைக்களத்தின்  இயல்பினைக் கொண்ட வெம்மை மிக்க தீ நிறைந்த
ஓம குண்டத்தில் வீழ்ந்தன.
 

                                                 (44)
 

8978.

வாரணம் அனையவன் துணிப்ப, வான் படர்
தார் அணி முடிப் பெருந் தலைகள் தாக்கலால்,
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணிக் குடம் உடைந்து போயதால்.
 

வாரணம்  அனையவன்  துணிப்ப  வான்  படர்  -  யானையை
ஒத்தனவாகிய    இலக்குவன்   (அம்பினால்)    துண்டித்துத்    தள்ள
விசும்பினின்றும்   வீழும்;   தார்   அணி  முடிப்பெருந்  தலைகள்
தாக்கலால்
  -    மாலையினையுடைய    முடி   அணிந்த   தலைகள்
மோதித் தாக்குவதனால்; ஆரண  மந்திரம் அமைய  ஓதிய  -  வேத
மந்திரங்களைப்   பொருந்த   ஓதி;   பூரண  மணிக்குடம்  உடைந்து
போயதால்
 -  (நீர்  நிறைந்து,  யாக  வேதிகையில்) அமைக்கப்பட்ட
மணிகள் பொருந்திய நிறை குடம் உடைந்து போயிற்று.
 

                                                 (45)
 

8979.

தாறு கொள் மதகரி சுமந்து, தாமரை
சீறிய முகத் தலை உருட்டி, செந் நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழுங் கனல் அவியச் சென்றவால்.
 

செந்நிறத்து ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து - செந்நிறத்தினை
உடைய      (வடுப்பட்ட)     புண்களிலிருந்து    சுரந்து    பெருகிய
குருதியினாலாகிய;   ஓங்கு   அலை   யாறுகள்  -  உயர்ந்து  எழும்
அலைகளை  உடைய  ஆறுகள்;  தாறு  கொள்  மதகரி  சுமந்து  -
அங்குசத்தாற்    செலுத்தப்    படுதலை   உடைய   மதயானைகளைச்
சுமந்துகொண்டு;  தாமரை  சீறிய முகத்தலை உருட்டி - செந்தாமரைப்
பூவினைச்  சினந்த  (செங்கண்களை உடைய)  முகத்தோடு  பொருந்திய
(வீரர்களின்) தலைகளை உருட்டி; எழுங்கனல் அவியச்