சென்றவால் - (ஓமகுண்டத்தில்) எழுந்து எரியும் வேள்வித்தீ அவியும்படி சென்று பாய்ந்தன. |
(46) |
8980. | தெரி கணை விசும்பிடைச் சுமந்து, செம் மயிர் வரி கழல் அரக்கர்தம் தடக் கை வாளொடும் உரும் என வீழ்தலின், அனலிக்கு ஓக்கிய எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால். |
தெரிகணை விசும்பிடைச் சுமந்து - (இலக்குவன்) ஆராய்ந்து எய்த அம்புகளால் விசும்பின் கண்ணே சுமக்கப்பெற்று; செம்மயிர் வரிகழல் அரக்கர் தம் தடக்கை - சிவந்த மயிரினையும் வரிந்து கட்டப்பெற்ற வீரக்கழலையுடைய அரக்கர்களுடைய பெரிய கைகள்; வாளொடும் உரும் என வீழ்தலின் - (தாம் பிடித்துள்ள) வாட்படையுடனே இடிபோன்று (நிலத்தில்) வீழ்தலால்; அனலிக்கு ஓக்கிய எருமைகள் மறிந்தன, மறியும், ஈர்ந்தவால் - தீக்கடவுளுக்கென (யாகத்தில்) உரிமை செய்து வைக்கப்பட்ட எருமைகள் (வெட்டுண்டு) இறந்தன. ஆடுகளும் (அவ்வாறே) பிளக்கப்பட்டு இறந்தன. |
(47) |
8981. | அம் கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று அம் கடம் கிழிந்திலர், அழிந்த ஆடவர், அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் அங்கு அடங்கினர், தொடர் பகழி அஞ்சினார். |
அம் கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின் நின்று - அழகிய கன்னங்கள் (கிழியப்பெற்று) வழிகின்ற குருதியுடன் பெரிய அருவி வீழ்கின்ற குன்றினைப் போல (உயிர் எஞ்சி) நின்று; அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் - (தம்) அழகிய (திண்மையான) உடம்பு கிழியப்பெறாது (தோற்றழிவதால்) நெஞ்சழிந்த அரக்க வீரர்கள்; தொடர் பகழி அஞ்சினர் - (இலக்குவனது வில்லினின்றும்) தொடர்ந்து வரும் அம்புகளுக்கு அஞ்சியவர்களாய்; அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் அங்கு அடங்கினர் - போர்க்களமாகிய அவ்விடத்தில் முழுதும் பரவிய குருதிக் கடலினுள்ளே அடங்கி மறைந்தனர். |
(48) |
8982. | கால் தலத்தொடு துணிந்து அழிய, காய் கதிர்க் கோல் தலைத்தலை உற, மறுக்கம் கூடினார், |