| வேல் தலத்து ஊன்றினர், துளங்கு மெய்யினர், நாறு அலைக் குடலினர், பலரும் நண்ணினார்.* |
கால் தலத்தொடு துணிந்து அழிய - கால்கள் தரையொடு துணிக்கப்பட்டுச் சிதைந்து வீழ; காய்கதிர்க் கோல் தலைத் தலை உற - (இலக்குவன் ஏவிய) வெதுப்பும் சுடரினையுடைய அம்புகள் மேன்மேலும் வந்து பொருந்த; மறுக்கம் கூடினார் பலரும் துளங்கு மெய்யினர் - கலக்கமுற்றவர்களாகிய அரக்கர்கள் பலரும் நடுங்கிய உடம்பினராய்; நாறு அலைக்குடலினர் - (வயிற்றின் புறத்தே) வெளிப்பட்டு அலைதலை உடைய குடரினை உடையராய்; வேல் தலத்து ஊன்றினர் நண்ணினார் - (தம் கையிற் கொண்ட) வேற் படையை (ஊன்று கோலாகக் கொண்டு) ஊன்றியவர்களாய் (வருந்தி) அடைந்தார்கள். |
(49) |
8983. | பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார், தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற,- அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்- தம் குடர் முதுகிடைச் சொரியத் தள்ளுவார். |
தம் குடர் முதுகிடைச் சொரியத் தள்ளுவார் - தமது குடர் முதுகின் வழியாகவெளிப்பட்டுச் சரிந்த தொங்க, (அதனை ஒரு கையினால்) உள்ளே தள்ளிக்கொண்டு (மீளவும் போர்முகஞ்) செல்லும் அரக்கர் வீரர் சிலர்; பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார் - வெகுண்டு பொருது, உடல் துணிக்கப்பட்ட தம் அருமைப் புதல்வரை (அங்கேயே) விட்டுச் செல்ல ஆற்றாதவராய்; தொங்கு உடல் தோள் மிசை இருந்து சோர்வுற - தொங்கும் இயல்பினதாகிய (அம்மைந்தரது) உடம்பு (தம்) தோள் மீதிருந்தவாறு சோர்ந்து தொங்க; அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார் - அவ்விடத்திற் (பகைவரோடு) பொருது நிற்கும் தம்பியைத் தழுவிக்கொண்டு (பகைவர் சேனையை எதிர்த்து) நெருங்கினார்கள். |
(50) |
8984. | மூடிய நெய்யொடு நறவம் முற்றிய சாடிகள், பொரியொடு தகர்ந்து தள்ளுற, கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய் அறு குறை அறுக்கும் ஆக்கைகள். |