| நிகும்பலை யாகப் படலம் | 795 |
ஒத்த (தனது) பெருஞ்சேனையானது; விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் - மாறுபட்டு வீசும் பெருங்காற்று மோதுதலால் (மரங்கள்) ஒடிந்து சின்னபின்னப்பட்டுக் கிடக்கும்; தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையே - சோலையினை ஒத்துச் சிதைந்து கிடந்த தன்மையினை; திசைதொறும் நோக்கிக் கண்டனன் - (இந்திரசித்து) எல்லாத் திசைகளிலும் உற்று நோக்கிக் கண்டான். | (53) | 8987. | மிடலின் வெங் கட கரிப் பிணத்தின் விண் தொடும் திடலும், வெம் புரவியும், தேரும், சிந்திய உடலும், வன் தலைகளும், உதிரத்து ஓங்கு அலைக் கடலும், அல்லாது இடை ஒன்றும் கண்டிலன். | மிடலின் வெங் கட கரிப்பிணத்தின் விண் தொடும் திடலும் - வன்மை மிக்க கொடிய மதமுடைய யானைகளின் பிணங்களாலாகிய வானத்தை அளாவிய மேட்டுப்பகுதியும்; வெம்புரவியும் தேரும் சிந்திய உடலும், வன்தலைகளும் - வெவ்விய குதிரைகளும் தேர்களும் (வீரர்களின்) சிதறுண்ட உடம்புகளும், தலைகளும்; ஓங்கு அலை உதிரத்துக் கடலும் - ஓங்கி மேலெழும் அலைகளை உடைய குருதிக் கடலும்; அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் - ஆகிய இவற்றை அன்றி (த்தன் சேனையில் அழிவின்றி உள்ளனவாக) அப்போர்க் களத்தினிடையே வேறொன்றையுங் காணாதவனாயினான். | (54) | 8988. | நூறு நூறாயிர கோடி நோன் கழல் மாறு இல் போர் அரக்கரை, ஒருவன் வாட் கணை கூறு கூறு ஆக்கிய குவையும், சோரியின் ஆறுமே, அன்றி, ஓர் ஆக்கை கண்டிலன். | நோன்கழல் மாறு இல்போர் நூறு நூறாயிர கோடி அரக்கரை - ;வலிய வீரக்கழலினையும் மாறுதலில்லாத போராற்றலையும் உடைய நூறு நூறாயிரங் கோடி அரக்க வீரர்களை ஒருவன் வாட்கணை கூறுகூறு ஆக்கிய குவையும் - (இலக்குவன் என்னும்) ஒருவனுடைய கூரிய அம்புகள் துண்டந் துண்டமாகச் சிதைத்த பிணக்குவையினையும்; சோரியின் ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் - (அங்கு பெருகி ஓடிய) குருதி ஆற்றினையுமே அல்லாமல் வேறு முழுமையான உடம்பினை உடையார் யாரையும் (இந்திரசித்து அப்போர்க்களத்தில்) கண்டிலன். |
|
|
|